தாசில்தாரை அடித்த விவகாரம்.! மதுரை நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆஜர்.!

2011 தேர்தல் சமயத்தில் தாசில்தாரை அடித்த விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். 

கடந்த 2011 தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை , மேலூரில், ஒரு கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் திமுக நிர்வாகிகள் பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரின் பேரில் அப்போதைய மேலூர் பகுதி தாசில்தாரும், தேர்தல் பொறுப்பாளருமான காளிமுத்து , அதிகாரிகளுடன் அங்கே சென்றார்.

அப்போது மு.க.அழகிரி தரப்பினருக்கும், தாசில்தாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, அப்போது தாசில்தார் காளிமுத்து , மு.க.அழகிரி தரப்பினர் தன்னை தாக்கியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.

இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று விசாரணை நடைபெறுவதால் நேரில் தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆஜரானார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment