ஓபிஎஸ்-ஐ மீண்டும் இணைத்துக் கொள்ளக்கூடாது – மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எதிர்ப்பு!

ஓபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து நீக்கிய விவகாரத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எதிர்ப்பு. சென்னையில் தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. அப்போது, ஓபிஎஸ்-ஐ மீண்டும் அதிமுகவில் இணைக்கக்கூடாது என்று பெரும்பாலான நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதில், நத்தம் விஸ்வநாதன் மட்டுமின்றி பெரும்பாலான நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் இணைக்கக்கூடாது என தெரிவித்தாக கூறப்படுகிறது. பொருட்களில் போலி இருப்பது போன்று அரசியலில் … Read more

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டம் தொடங்கியது!

எடப்பாடிபழனிசாமி தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் தொடங்கியது.  அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக பழனிசாமி ஆலோசனையில் நடத்துகிறார். மேலும், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக வளர்ச்சி பணிகள், திமுக அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பது பற்றியும் ஆலோசித்து வருவதாக  கூறப்படுகிறது.

அதிமுகவுக்கு பிடித்துள்ள நோய் “இபிஎஸ்”, அதற்கான மருந்து “ஓபிஎஸ்” – மனோஜ் பாண்டியன்

சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மனோஜ் பாண்டியன் மற்றும் ஜேசிடி பிரபாகர் பேச்சு. சென்னையில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய மனோஜ் பாண்டியன், அதிமுகவுக்கு பிடித்துள்ள நோய் எடப்பாடி பழனிசாமி, அதற்கான மருந்துதான் ஓ.பன்னீர்செல்வம். எடப்பாடியிடம் உள்ளது டெண்டர் படை, ஓ.பன்னீர்செல்வத்திடம் உள்ளது தொண்டர் படை. ஒத்துவரவில்லை என்றால் எடப்பாடியை ஒழித்துவிட்டு ஒன்றிணைவோம் என மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மத்தியில் … Read more

ஓபிஎஸ் நடத்துவது கட்சி கூட்டம் அல்ல – ஜெயக்குமார் விமர்சனம்

பண்ருட்டி ராமச்சந்திரன்மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரை. திமுக அரசுக்கு எதிராக ஒத்திவைக்கப்பட்ட மாவட்டங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சொத்து வரி, பால்விலை, மின்கட்டண உயர்வை கண்டித்து, திமுக அரசுக்கு எதிராக ராசிபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான கூட்டம் கட்சி கூட்டம் அல்ல என விமர்சித்துள்ளார். ஓபிஎஸ் நடத்தும் கம்பெனியில் இயக்குநர்கள் குழு கூட்டம்தான் நடந்து கொண்டிருக்கிறது. மூத்த அரசியல்வாதியான … Read more

ஓபிஎஸ் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம்.. நிறைவேற்றப்பட உள்ள முக்கிய தீர்மானங்கள்?

ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் போட்டி பொதுக்குழு நடத்துவது குறித்து முடிவெடுக்க வாய்ப்பு. அதிமுகவின் தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். அதன்படி, ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச. இராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள YMCA திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் தனியாக செயல்பட தொடங்கியதுக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். … Read more

திமுக சார்பில் 100 பொதுக்கூட்டங்கள்! தீர்மானம் நிறைவேற்றம்!

அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி டிசம்பர் 15-ல் 100 பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என தீர்மானம். திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான முக ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். திமுக முன்னாள் பொதுச்செயலாளர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி டிசம்பர் 15-ல் … Read more

உள்ளாட்சி தேர்தலில் 100 % வெற்றி – முதல்வர் முக ஸ்டாலின் அறிவுறுத்தல்!

உள்ளாட்சி தேர்தலில் 100க்கு 100% வெற்றி பெற வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவுறுத்தல். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்ட திமுக செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது, 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் திமுக 100க்கு 100% வெற்றி பெற திமுகவினர் பாடுபட வேண்டும் … Read more

நாளை காலை திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் – பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.!

நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 9 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என தெரிவித்துள்ளார். அப்போது, மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.