அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தை! நெஞ்சை பத பதைக்க வைக்கும் வீடியோ!

Child

Chennai : அடுக்குமாடிக் குடியிருப்பின் மேற்கூரையில் சிக்கி, உயிருக்குப் போராடிய குழந்தையைப் அக்கம்பக்கத்தினர் பத்திரமாக மீட்ட வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை மாவட்டம் ஆவடி திருமுல்லைவாயின் பூம்பொழி நகரில் அமைந்து இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பச்சிளம் குழந்தை ஒன்று தவறி கீழே இருந்த தகர சீட்டில் விழுந்த சம்பவம் நெஞ்சை பதற வைத்துள்ளது. 4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை நல்வாய்ப்பாக முதல் மாடியின் மேற்கூரையில் விழுந்து சிக்கியுள்ளது. அந்த குழந்தை தகர சீட்டில் கீழே … Read more

500 அரசு ஊழியர்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம்!

voting

Election2024: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் 500 அரசு ஊழியர்கள் ஏமாற்றம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற உள்ளதால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் விறுவிறுப்பாக வாக்கு செலுத்தி வருகின்றனர். இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். அதன்படி, தமிழகத்தில் பிற்பகல் 3 மணி … Read more

வெள்ளத்தில் மூழ்கிய துபாய்…75 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை.!

uae rain

Dubai floods: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரலாறு காணாத கனமழை பெய்து, முக்கிய நெடுஞ்சாலைகளில் வெள்ளம் மற்றும் துபாய் சர்வதேச விமான நிலையம் சீர்குலைந்துள்ளன. இது கடந்த 75 ஆண்டுகளில் பெய்த மிகப்பெரிய மழை என்று அரசாங்கம் கூறியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் வெறும் 12 மணி நேரத்தில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் … Read more

“அக்கா1825” என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தமிழிசை!

Tamilisai Soundararajan

Election2024: “அக்கா1825” என்ற பெயரில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தமிழிசை சௌந்தரராஜன். தெலுங்கானா ஆளுநர், புதுச்சேரிதுணைநிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த தமிழிசை சௌந்தரராஜன் வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தென் சென்னை பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழிசை சௌந்தரராஜன், இன்று தென் சென்னை தொகுதிக்கான “அக்கா1825” என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளியிட்டார். இதன் பின் தமிழிசை சௌந்தரராஜன் … Read more

பிரதமர் ரோடு ஷோவில் விதிமீறல்… வழக்குப்பதிவு செய்த காவல்துறை!

road show

PM Modi: சென்னையில் நடைபெற்ற பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் விதிமீறல் நடந்ததாக வழக்குப்பதிவு. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் பாஜக ஆகிய பிரதான கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், தமிழகத்தில் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் … Read more

சென்னையில் தபால் வாக்கு சேகரிக்கும் பணி இன்று முதல் தொடக்கம்!

Postal vote

Election2024: சென்னையில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 4 மக்களவை தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் தேர்தலுக்கான பணியில் … Read more

தமிழ்நாட்டில் சுங்கக் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு!

tollgate

Tollgate: நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு முடிவைத் திரும்பப் பெற்றது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், தமிழகத்தில் அரியலூரில் மணகெதி, திருச்சியில் கல்லக்குடி, வேலூரில் வல்லம், திருவண்ணாமலையில் இனம்கரியாந்தல், விழுப்புரத்தில் தென்னமாதேவி சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்வு இன்று முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த கட்டண … Read more

சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை இடிந்ததில் மூவர் பலி!

Chennai: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மதுபான விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மூவர் உயிரிழப்பு. சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் பிரபலமான தனியார் மதுபான விடுதி அமைந்துள்ளது. இதன் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் சிக்கி இருப்பதாகவும் அவர்கள் மீட்க கூடிய பணி நடைபெற்று வருவதாகவும் அபிராம்புரம் போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் மதுபான விடுதியில் பணியாற்றிய … Read more

ராமேஸ்வரம் கஃபே: தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை நிறைவு

Rameshwaram Cafe: ராமேஸ்வரம் கஃபே ஓட்டல் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களை என்ஐஏ அதிகாரிகள் இன்று கைது செய்தனர். பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை இன்று நடைபெற்றது. அதே போல பெங்களூரில் நடைபெற்ற சோதனையின் போது இரண்டு சந்தேக நபர்கள் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் மார்ச் 1ம் தேதி 2 குண்டுகள் வெடித்தன. அந்த … Read more

மேலும் 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு.. ஏப்ரல் 1 முதல் அமல்!

tollgate

Tollgate: சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை புறநகரில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டண உயர்வு விவரத்தை நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதாவது, பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியுள்ள சுங்க கட்டணம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி பரனூர் சுங்கச்சாவடியில் ஒரு வழி … Read more