மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்குவதற்கு மாநில அரசு ஏப்ரல் 16 மற்றும் ஜூன் 17, 2025 அன்று அரசாணைகள் (GR) பிறப்பித்திருந்தது. இந்த முடிவு, மராத்தி மற்றும் ஆங்கில வழி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்தியை கட்டாயப் பாடமாக்குவதாக இருந்தது. ஆனால், இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சிகளான ஷிவசேனா (யு.பி.டி), மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (MNS), மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP-SP) உள்ளிட்டவை கடும் […]
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ஒரு படகையும், 8 மீனவர்களையும் கைது செய்து, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் இலங்கை கடற்படை அதிகாரிகள். மன்னார் நீதிமன்ற நீதிபதி வீட்டில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 8ம் தேதி வரை மீனவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். மீனவர்கள் 8 பேரும் யாழ்ப்பாண சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைதான […]
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக எம்.பி. யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து முன்னாள் பாஜக எம்.பி. தருண் விஜய் உள்ளிட்ட பலரும் அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர். ஆனால், பாஜக தேசிய தலைமை இதுவரை அண்ணாமலையின் தேசிய பொதுச்செயலாளர் நியமனம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. எம்.பி. யதுவீர் கிருஷ்ணதத்த […]
சென்னை : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பேசி முடிவெடுப்பார்கள் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். முன்னதாக, தனியார் நாளிதழ் ஒன்றிக்கு அளித்த பேட்டியில், ”2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் NDA கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும் என்றும், அதில் பாஜக அங்கம் வகிக்கும் என்றும் அமித் ஷா கூறியிருந்தார். மேலும், முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் […]
சென்னை : 2026 தேர்தலில் வென்று ஆட்சியமைத்தால், அதிமுகவில் இருந்து முதல்வர் வருவார் என்று அமித்ஷா கூறியது பேசுபொருளாகியுள்ளது. முதல்வராக இபிஎஸ் வருவார், அதிமுகவே ஆட்சியமைக்கும் என்று அதிமுக திரும்ப திரும்ப கூறி வருகிறது. ஆனால் அமித்ஷாவோ, இபிஎஸ் முதல்வராக வருவார் என்று கூறாமல், அதிமுகவில் இருந்து முதல்வர் வருவார் என்று குறிப்பிட்டுள்ளார். இது, கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது, புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ‘ NDA கூட்டணியை பொறுத்தவரையில் […]
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித் ஷா உறுதிபட தெரிவித்துள்ளார். தனியார் நாளிதல் ஒன்றிக்கு பேட்டியளித்த அவர், லோக்சபா தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால், தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும் என்றார். எனவே, சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் பரப்புரை மூலம் ஓட்டுகளை திரட்டினால், நிச்சயம் NDA அரசு அமையும் என கூறினார். கூட்டணி ஆட்சி தமிழகத்தில் கூட்டணி அரசு அமைக்கப்படுமா? […]
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா, அரசியல் பயணத்தில் இணையவிருப்பதாகவும், பாஜகவில் மாநில அளவிலான பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன்னோடியாக, அவர் துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து, அவருடனான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு, அவரது அரசியல் நுழைவுக்கு முக்கிய […]
சென்னை : விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா, நேற்றிரவு கலைவாணர் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “அணு ஆயுதங்களால் தகர்க்க முடியாத ஒன்று, இந்தியாவில் சாதிய கட்டமைப்புகளாக உள்ளது. முருகன் தமிழ் கடவுள் என்றால் சிவனும், பார்வதியும் தமிழ் கடவுள் தான.. கணேசன் மட்டும் ஏன் தமிழ் கடவுளாக இல்லை..?” இதை கேட்டால் அவர்களுக்கு கோவம் வருகிறது. இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது, ஆங்கிலேயர் ஆட்சிக்கு […]
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது. முருகன் மாநாட்டில் பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும் இதில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பலவிதமான நிகழ்ச்சிகள், உரைகள், கலை நிகழ்வுகள் இதில் இடம்பெற்றன. இந்த மாநாடு ஆன்மீக நிகழ்வாக […]
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான முருக பக்தர்கள், 15 நாட்கள் விரதம் இருந்து மாநாட்டில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்றார். மேலும், பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்த மாநாடு ஆன்மீக மற்றும் கலாச்சார நிகழ்வாக அறிவிக்கப்பட்டாலும், இதற்கு அரசியல் பின்னணி இருப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், […]
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற பிரமாண்டமான யோகா நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆளுநர் விருட்சசனம், புஜங்காசனம் மற்றும் தனுரசசனம் உள்ளிட்ட யோகா ஆசனங்களைச் செய்தார். அந்த வகையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம், காக்கா தோப்பு பகுதியில் உள்ள அதி நர்சிங் கல்லூரியில் நடந்த சிறப்பு யோகா பயிற்சியில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான நமீதா பங்கேற்றார். மேலும், அவருடன் […]
மதுரை : மாவட்டத்தில் ஜூன் 22, 2025 அன்று நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு (முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு) தமிழக பாஜக மற்றும் இந்து முன்னணி இணைந்து ஒருங்கிணைக்கும் பிரம்மாண்ட நிகழ்வாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு, மதுரை அம்மா திடலில் நடைபெறவுள்ளதாகவும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் பங்கேற்பார்கள் எனவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். மாநாட்டில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆந்திரபிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாண் […]
நெல்லை: கடந்த ஏப்ரல் 11ம் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) கீழ் போட்டியிடும் என அறிவித்தார். இந்தக் கூட்டணி தமிழ்நாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (ஈபிஎஸ்) தலைமையில் செயல்படும், மேலும் தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார். அதே நேரம், […]
சென்னை : தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 19.260 பணியிடங்கள் 18 மாதங்களில் நிரப்பப்படும்” என்று சட்டப்பேரவையில் முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு அறிகுறி கூட திமுக ஆட்சியில் தென்படவில்லை என கூறி திமுகவை விமர்சனம் செய்து பதிவு ஒன்றை வெளிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ” தகுதித் தேர்வில் வென்ற இடைநிலை ஆசிரியர்களுக்குப் பணியாணை வழங்காமை, போதிய வகுப்பறை வசதியின்மை, மாணவர்களே கழிவறையைக் கழுவும் […]
சென்னை : சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் சென்று கொண்டிருக்கும் வேலையில் பாமக உட்கட்சி விவகாரம் என்பது எப்போது முடிவுக்கு வரும் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போகிறது என்று தொண்டர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். ஆம், அன்புமணி – ராமதாஸ் இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இருவரையும் சமரசம் செய்ய முக்கிய நபர்கள் முயன்றதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி வேண்டவே வேண்டாம் என […]
சென்னை : நேற்று மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு திமுகவை விமர்சித்து பேசினார். இது குறித்து பேசிய அவர் “” மு.க.ஸ்டாலின் அமித்ஷாவால் திமுகவை தோற்கடிக்க முடியாது என கூறியுள்ளார். சரி நான் அவருக்கு இந்த நேரத்தில் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என்னவென்றால், என்னால் உங்களை தோற்கடிக்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் உங்களை (திமுகவை) தோற்கடிக்க தயாராக உள்ளனர். இவ்வளவு காலம் அரசியலில் மக்களின் நாடித்துடிப்பை […]
சென்னை : தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக பாஜகவிடம் இருந்து எந்தவொரு அழைப்பும் வரவில்லை எனத் தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, அரசியல் கட்சிகளிடையே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசியிருக்கிறார். தேமுதிகவும் பாஜகவும் கடந்த தேர்தல்களில் கூட்டணியாக செயல்பட்டிருந்தாலும், தற்போது எந்த உத்தியோகபூர்வ அழைப்பும் இல்லை என பிரேமலதா தெளிவுபடுத்தியுள்ளார். பாஜகவுடனான கூட்டணி குறித்து ஊடகங்களில் எழுந்த கேள்விகளுக்கு பதிலளித்த […]
மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து கொண்டு பேசிய அவர், கூட்டணிக் கட்சிகளுடன் நட்புறவு பாராட்டவும், இணக்கமாக செயல்படவும், 2026-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்கவும் பாஜகவினருக்கு உத்தரவிட்டார். “நம்பிக்கையோடு பணியாற்றுங்கள், வரும் காலம் நமதே” என்று உறுதியாகக் கூறிய அவர், தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், தமிழ் மொழியில் பேச […]
மதுரை : மதுரை வேலம்மாள் திடலில் இன்று (ஜூன் 8, 2025) மாலை 3 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி உத்திகள் மற்றும் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெறவுள்ளன. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று மதுரைக்கு அமித்ஷா வருகை தந்தார். வருகை தந்தவுடன் நேரடியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி […]
சென்னை : தமிழ்நாடு இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆகியவற்றின் சார்பில் மதுரையில் ஜூன் 22 அன்று நடைபெறவுள்ள “முருக பக்தர்கள் மாநாடு” நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு அறிவிக்கப்பட்ட நாள் முதல் தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் தங்கள்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ”முருகன் மாநாட்டை குஜராத், உத்தரப்பிரதேச மாநிலங்களில் நடத்துவார்களா? விநாயகரை தமிழக மக்கள் வணங்கும்போது முருகரை குஜராத் மக்கள் […]