அதிமுகவுக்கு பிடித்துள்ள நோய் “இபிஎஸ்”, அதற்கான மருந்து “ஓபிஎஸ்” – மனோஜ் பாண்டியன்

சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மனோஜ் பாண்டியன் மற்றும் ஜேசிடி பிரபாகர் பேச்சு.

சென்னையில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய மனோஜ் பாண்டியன், அதிமுகவுக்கு பிடித்துள்ள நோய் எடப்பாடி பழனிசாமி, அதற்கான மருந்துதான் ஓ.பன்னீர்செல்வம்.

எடப்பாடியிடம் உள்ளது டெண்டர் படை, ஓ.பன்னீர்செல்வத்திடம் உள்ளது தொண்டர் படை. ஒத்துவரவில்லை என்றால் எடப்பாடியை ஒழித்துவிட்டு ஒன்றிணைவோம் என மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மத்தியில் மனோஜ் பாண்டியன் ஆவேசமாக தெரிவித்தார். மேலும், கூவத்தூரில் நடந்தது குறித்து விசாரித்து அனைவரையும் உள்ளே தள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பேசிய ஜேசிடி பிரபாகர், பழனிசாமி இல்லாத அதிமுக தமிழ்நாட்டில் விரைவில் உருவாகும். ஓபிஎஸ் தான் மெகா கூட்டணி அமைப்பார், அதற்கான காலம் கனிந்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment