ஓபிஎஸ்-ஐ மீண்டும் இணைத்துக் கொள்ளக்கூடாது – மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எதிர்ப்பு!

ஓபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து நீக்கிய விவகாரத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எதிர்ப்பு.

சென்னையில் தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. அப்போது, ஓபிஎஸ்-ஐ மீண்டும் அதிமுகவில் இணைக்கக்கூடாது என்று பெரும்பாலான நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதில், நத்தம் விஸ்வநாதன் மட்டுமின்றி பெரும்பாலான நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் இணைக்கக்கூடாது என தெரிவித்தாக கூறப்படுகிறது. பொருட்களில் போலி இருப்பது போன்று அரசியலில் போலி பன்னீர்செல்வம் என நத்தம் விஸ்வநாதன் விமர்சித்துள்ளார்.

எனவே, ஓபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து நீக்கிய விவகாரத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்றும் சட்டமன்ற தேர்தலை போல நாடாளுமன்ற தேர்தலையும் பழனிசாமி தலைமையில் எதிர்கொள்ள தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுபோன்று பன்னீர்செல்வம் அணிக்கு போனவர்களை மீண்டும் இணைக்கக்கூடாது என்றும் போனர்வகள் போனவர்களாக இருக்கட்டும் என்றும் பழையன கழிந்தால் தான் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க முடியும் எனவும் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூட்டத்தில் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment