எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டம் தொடங்கியது!

எடப்பாடிபழனிசாமி தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் தொடங்கியது. 

அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக பழனிசாமி ஆலோசனையில் நடத்துகிறார். மேலும், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக வளர்ச்சி பணிகள், திமுக அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பது பற்றியும் ஆலோசித்து வருவதாக  கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment