#BREAKING: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கு ரத்து!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

நில மோசடி புகாரில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மகள், மருமகன் நவீன்குமார் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது. மருமகனின் சகோதரர் சொத்துக்களை அபகரித்த புகாரில் ஜெயக்குமார் மீது வழக்கு பதியப்பட்டது.

நில மோசடி புகாரின் வழக்கு விசாரணையின்போது, 2016-ல் நடைபெற்றதாக கூறப்படும் சம்பவத்திற்கு 2021-ஆம் ஆண்டு தான் வழக்கு தொடரப்பட்டது என ஜெயக்குமார் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி உத்தரவிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment