கரும்புகளால் 13 மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்கள்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்கள்..

ஜார்கண்டில் 6ஆம் வகுப்பு மாணவர்கள் 13 பேரை ஆசிரியர் கரும்புகளால் கொடூரமாக தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலம் கும்லாவில் பள்ளி ஆசிரியர் ஒருவர், 6ஆம் வகுப்பு மாணவர்கள் 13பேரை கரும்புகளால் கொடூரமாகத் தாக்கியதைத் தொடர்ந்து மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போது, மாணவர்கள் தனது உத்தரவின் படி நடனமாட மறுத்ததால் கோபமடைந்த ஆசிரியர் மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

ஆசிரியரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் 6-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளியின் வகுப்பறைக்குள் அடைத்து வைக்கப்பட்டதாகவும், காயமடைந்த 13 மாணவர்களும் சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்  பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

author avatar
Varathalakshmi

Leave a Comment