தேர்தல் சமயத்தில் மட்டுமே கூட்டணி.. இதற்கு அவசியம் இல்லை – ஜெயக்குமார்

திமுகவுடன் அண்ணன், தம்பி உறவு எல்லாம் முடிந்துவிட்டது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.

சென்னை புளியந்தோப்பில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மாம்பலம், சைதாப்பேட்டை, வடசென்னையில் தண்ணீர் தேங்கியுள்ளது. வெள்ளத்தை வீடியோ எடுத்து செய்தியாக வெளியிட்டால் மிரட்டுகின்றனர். பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதை மறைக்க முயற்சி செய்கின்றனர்.

ஊடகங்களுக்கே இந்த நிலை என்றால் பாமர மக்களின் நிலை என்னவாகும். மழை வடிந்துவிட்டதாக மாயபிம்பத்தை உருவாக்குகின்றனர். முதல்வரின் தொகுதியான கொளத்தூரிலேயே தண்ணீர் நிற்கிறது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செய்தி வெளியிடாத ஊடக நிறுவனங்களை திமுக அரசு மிரட்டுகிறது. சென்னையில் வெள்ளநீர் வடிந்து விட்டதாக விளம்பரம் செய்கின்றனர்.

ஒருநாள் மழைக்கே சென்னை மிதக்கிறது இன்னும் 6 நாள் மழை இருக்கிறது என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவை இயக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. தேர்தல் சமயத்தில் மட்டுமே கூட்டணி. திமுகவுடன் அண்ணன், தம்பி உறவு எல்லாம் 1972-லேயே முடிந்துவிட்டது என்றும் திமுக தான் எங்கள் பகையாளி எனவும் குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment