வாஷிங்டன் : மத்திய கிழக்கில் கடந்த இரண்டு மாதங்களாக நிலவி வந்த தற்காலிக அமைதி (April Ceasefire) இன்று (ஜூன் 8, 2026) முற்றிலும் உடைந்து, ஒரு மாபெரும் போராக உருவெடுத்துள்ளது. லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் ஏவுகணைகளை வீச, அதற்குப் பலியாக இஸ்ரேல் ஈரானின் பொருளாதாரப் பகுதிகளைத் தாக்கி வருவதால் ஒட்டுமொத்த வான்வெளியும் போர்க்களமாக மாறியுள்ளது.
நிலைமை எல்லை மீறிச் செல்வதைக் கண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது 'Truth Social' பக்கத்தில் "இஸ்ரேலும் ஈரானும் தங்களுக்குள் மாறி மாறி நடத்திக்கொள்ளும் இந்த ஏவுகணைத் தாக்குதல்களை உடனடியாக (Immediately) நிறுத்த வேண்டும்" என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். "நான்தான் முடிவுகளை எடுப்பவன், நெதன்யாகு அல்ல" என்று டிரம்ப் எச்சரித்த சில மணி நேரங்களிலேயே இஸ்ரேல் இந்த விவாரத்தில் அமெரிக்காவையே அதிரவைக்கும் ஒரு தாக்குதலை நடத்தியுள்ளது.