முறைகேடு புகார் - குழு அமைத்தது அண்ணா பல்கலைக்கழகம்!

Apr 22, 2023 - 07:05
 0  0

காஞ்சிபுரம் பொறியியல் கல்லூரியில் முறைகேடு நடந்த புகாரை அடுத்து குழு அமைத்தது அண்ணா பல்கலைக்கழகம்.

அரசு பொறியியல் கல்லூரிகளில் நிதி பயன்பாடு பற்றி ஆய்வு செய்ய குழு அமைத்தது அண்ணா பல்கலைக்கழகம். காஞ்சிபுரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கு கல்லுரியான அரசு பொறியியல் கல்லூரியில் ரூ.3.80 கோடி முறைகேடு நடந்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்லூரி வங்கி கணக்கில் இருந்த ரூ.3.80 கோடியை பிரபு என்பவர் முறைகேடு செய்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து குழு அமைத்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம். காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான காஞ்சிபுரம் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது.

இந்த கல்லூரியில், வங்கி கணக்குகளை நிர்வகித்து வந்த பிரபு என்பவர் செய்த முறைகேடு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் விடுதியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளிடம் டெபாசிட் பணம் பெறுவது வழக்கம். இதில் பிரபு என்பவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை அடுத்து நிதி பயன்பாடு பற்றி ஆய்வு செய்ய குழு  அமைத்தது அண்ணா பல்கலைக்கழகம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow