யோக்கியமாக இருந்ததால் தான் அதிமுக பொதுச்செயலாளராக வந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி – கே.பி.முனுசாமி

ஆட்சியாளர்களின் தவறை சுட்டிக்காட்டுவதுதான் எங்கள் வேலை என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேட்டி. 

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், விழுப்புரத்தில் நடந்த கொலையை பேரவையில் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித்தலைவர் இபிஎஸ்-ஐ மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விமர்சித்துள்ளார். இது கண்டனத்திற்குரியது.

ஆட்சியாளர்களின் தவறை சுட்டிக்காட்டுவதுதான் எங்கள் வேலை; யோக்கியமாக இருந்ததால் தான் அதிமுக பொதுச்செயலாளராக வந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி என தெரிவித்துள்ளார்.

 மேலும், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து அமைச்சர் மா சுப்பிரமணியன் விமர்சனம் செய்தால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment