விஷ்ணு விஷால் மூன்று நாயகிகளுடன் நடித்து வரும் படத்தில் முக்கிய வேடத்தில் கௌதம் மேனன்!

  • விஷ்ணு விஷால் தற்போது மானு ஆனந்த் இயக்கத்தில் எஃப்.ஐ.ஆர் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
  • இப்படத்தில் முக்கிய வேடத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்க உள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் தற்போது கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் எஃப்.ஐ.ஆர். இந்த திரைப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்லியம்சன், ரெபா மோனிகா ஆகியோர் நடித்து வருகின்றனர். கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனு ஆனந்த் இப்படத்தினை இயக்கி வருகிறார்.

இப்படம் போலீஸ் திரில்லர் கதை களம் கொண்ட படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் கௌதம் மேனன் நடிக்க உள்ளாராம். இந்த கதாபாத்திரம் படம் முழுக்க வரும். ஆதலால் இது கௌரவத் தோற்றம் இல்லை படத்தில் முக்கிய கதாபாத்திரம் என கூறப்படுகிறது. அனேகமாக கெளதம் மேனன் ஏற்றுள்ள கதாபாத்திரம் வில்லன் கதாபாத்திரமாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது.