ஆதிதிராவிட கிறிஸ்தவ மக்களுக்கு சலுகைகள் – முதல்வருக்கு கிறிஸ்தவ அமைப்பினர் நன்றி ..!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிறித்தவ அமைப்புகள் சார்பாக பாராட்டு விழா

இடஒதுக்கீட்டில் ஆதிதிராவிடர் மக்களுக்கு படிப்பில், வேலைவாய்ப்பில், உதவித்தொகையில் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை இந்துக்களில் உள்ள ஆதிதிராவிடர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் சட்ட அமைப்பு உள்ளது. கிறிஸ்தவர்களில் உள்ள ஆதிதிராவிடர்கள் இதனை பயன்படுத்துவது முடியாது.

ஆதிதிராவிட கிறிஸ்தவ மக்களுக்கு சலுகைகள்

இந்த நிலையில், கடந்த 19-ஆம் தேதி, சட்ட பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கிறிஸ்தவர்களில் உள்ள ஆதிதிராவிட மக்களுக்கும் சலுகைகள் வழங்கும்படியாக, இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தும் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்ட பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  தனித்தீர்மானம் கொண்டு வந்த நிலையில், அது நிரைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிறித்தவ அமைப்புகள் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. 

Leave a Comment