ஈரோடு: மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தவெக அமைச்சர் செங்கோட்டையன், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறன் குறித்துப் பல்வேறு அதிரடி விபரங்களைப் பகிர்ந்துள்ளார்.

60 ஆண்டுக்காலத் தமிழக அரசியல் வரலாற்றில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அண்ணா ஆகியப் பெரும் தலைவர்களுக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை இயற்கையின் கொடையாகத் தற்போதைய முதல்வர் விஜய் தமிழகத்தில் உருவாக்கியுள்ளார் என்று அவர் தனது பேச்சில் பெருமிதத்தோடு குறிப்பிட்டுள்ளார்.

தனது நீண்டகால அரசியல் பயணத்தை நினைவு கூர்ந்த அமைச்சர் செங்கோட்டையன், தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோருடன் பயணித்து அவர்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்குக் களப்பணியாற்றியதைச் சுட்டிக்காட்டினார்.

அதேபோல, தற்பொழுது தங்களின் 'வெற்றித் தளபதி' விஜய் தலைமையில் இணைந்து தமிழ்நாட்டில் புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திச் சாதனை படைத்துள்ளதாகத் தெரிவித்தார். இதன் காரணமாக, கடந்த பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் தற்பொழுது எதிர்க்கட்சி வரிசையில் போய் அமரும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும்; தவெக ஆளுங்கட்சியாக இருக்கும் வரை வேறு எவராலும் தமிழகத்தில் காலடி கூட வைக்க முடியாது என்ற புதிய வரலாற்றைத் தலைவர் விஜய் படைத்து வருகிறார் என்றும் அவர் கூறினார்.

மேலும், தற்பொழுது தமிழகத்தில் நிதிநிலை நெருக்கடியாக இருக்கும் சூழலிலும், வெள்ளை அறிக்கை (White Paper) வெளியிடப்பட்டுள்ள நிலையிலும், மக்களுக்குத் தான் அளித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முதல்வர் விஜய் தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறார் என்று அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்தார்.

தினமும் காலை 10 மணிக்குத் தலைமைச் செயலகக் கோட்டைக்கு வந்தால், மாலை 4:30 மணி வரை தொடர்ந்து மக்களைச் சந்தித்து, அவர்களுக்கான திட்டங்களை மட்டுமே சிந்தித்துச் செயல்படும் ஒரே முதலமைச்சராகத் தற்பொழுது ஜோசப் விஜய் விளங்கி வருகிறார் என்றும், உலகெங்கும் வாழும் தமிழர்களின் இதயங்களில் வாழும் ஒரே தலைவராகத் தவெக தலைவர் தளபதி விஜய் திகழ்கிறார் என்றும் கோபி விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் மிக உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியுள்ளார்.