வீரமாதேவி படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்..!

கனடாவில் இருந்து வந்து இந்தி படங்களில் நடித்து வரும் சன்னிலியோன் செக்ஸ் பட நடிகை என்பதால் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவரின் ஆபாச படங்கள் இணையதளத்தில் நிரம்பி கிடக்கிறது. முன்னணி இந்தி நடிகர்கள் தங்கள் படங்களில் சன்னிலியோன் நடிப்பதை விரும்புவதில்லை. பெண்கள் அமைப்பினரும் சில கவர்ச்சி நடிகைகளும் சன்னிலியோனை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று ஓங்கி குரல் எழுப்புகிறார்கள். பெங்களூருவில் நடன நிகழ்ச்சியொன்றுக்கு வரவிடாமலும் விரட்டினார்கள். செக்ஸ் நடிகை இமேஜை மாற்ற முயற்சிக்கிறார் சன்னிலியோன். … Read more

கோவை – பெங்களூர் உதய் எக்ஸ்பிரஸ் ரயில்: ஜூன் இறுதிக்குள் இயக்க திட்டம்..!

கோவை பெங்களூர் இடையே இயக்கப்பட உள்ள உதய் எக்ஸ்பிரஸ் ரயில் ஜூன் மாத இறுதிக்குள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவையிலிருந்து பெங்களூருக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என கடந்த 2016ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இத்திட்டம் இழுபறியில் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உதய் எக்ஸ்பிரஸ் இயக்கும் பொருட்டு முதற்கட்டமாக இரட்டை அடுக்குமாடி பெட்டிகள் சோதனை ஓட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து … Read more

நாள் ஒன்றுக்கு 150 முறை ஸ்மார்ட்போன் உபயோகிக்கும் மாணவர்கள் !அதிர்ச்சி ரிப்போர்ட் ..!

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி மன்றம் சார்பில்ஸ்மார்ட் போன்களை உபயோகிக்கும் இந்திய மாணவர்கள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. ஸ்மார்ட் போன்களை சார்ந்திருத்தல், இன்ப நாட்டவியல் கோட்பாடு மற்றும் டிஜிட்டல் இந்தியாவின் புதுமையான முயற்சிகளின் விளைவுகள் என்னும் தலைப்பில் நடந்த ஆய்வில் 20 மத்திய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 200 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் பயம்கலந்த எதிர்பார்ப்பு, தகவல்கள் காணாமல் போகும் பயம் போன்ற காரணங்களால் இந்திய மாணவர்கள் … Read more

தூத்துக்குடியில் அனல்மின் நிலையத்தில் 3-ஆவது யூனிட் பழுது 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. இதன் மூலம் தினமும் சுமார் 1050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அடிக்கடி ஏற்படும் பழுதால் முழு மின் உற்பத்தியை எட்டாத நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமையன்று 3-ஆவது யூனிட்டில் உள்ள கொதிகலனில் திடீரென பழுது ஏற்பட்டதால் அந்த யூனிட்டின் செயல்பாடு நிறுத்தப்பட்டது. இதனால், 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற … Read more

திருத்தணி அருகே அகத்தீஸ்வரர் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு!

ஐம்பொன் சிலைகள் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அகத்தீஸ்வரர் கோயிலில் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருத்தணியை அடுத்த பொதட்டூர்பேட்டையில் பிரசித்தி பெற்ற அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. நேற்று இரவு பூஜை முடிந்ததும், கோயில் நடையை பூட்டிவிட்டு அர்ச்சகர் சென்றுள்ளார். இன்று காலை கோயிலுக்கு வந்த பக்தர்கள் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் உள்ளே சென்று … Read more

BREAKING NEWS:கர்நாடகாவை தொடர்ந்து பீகாரிலும் பாஜகவிற்கு ஆப்பு! தேஜஸ்வி யாதவ் ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநரிடம் மனு!

தேஜஸ்வி யாதவ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா கூட்டணி தலைவர்கள் பீகார் ஆளுநர் சத்யபால் மாலிக்கை சந்தித்து கடிதம் அளித்தனர். கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளம்,காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கு மொத்தம் 117 இடங்கள் உள்ள போது தனிபெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் வாஜுபாய் வாலா அழைத்ததையடுத்து கோவா, பிஹார் ஆகிய மாநிலங்களிலும் மாற்றங்கள் கோரப்பட்டது. காங்கிரஸ் கோவா கிளையும், பிஹாரின் ராஷ்ட்ரிய ஜனதாதளமும் இதே காரணத்தைக் காட்டி தங்களும் ஆட்சியமைக்கத் தகுதியானவர்கள்தான் … Read more

நான்கு தலைமுறைகளை கடந்த மூதாட்டியின் 104வது பிறந்தநாய்விழா கேக் வெட்டி கொண்டாட்டம்..!

வாடிப்பட்டியில் நான்கு தலைமுறைகளை கடந்த மூதாட்டியின் 104வது பிறந்தநாய்விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. வாடிப்பட்டி நீரேத்தான் கிராமத்தை சேர்ந்தவர் ராஜூப்பிள்ளை, திராவிடர் கழகத்தின் மூத்த முன்னோடியான இவரது மனைவி மீனாட்சியம்மாள். ராஜூப்பிள்ளை கடந்த சில ஆண்டுகள் முன் இறந்து விட்ட நிலையில் அவரது மனைவி மீனாட்சியம்மாள் நான்கு தலைமுறைகளை கடந்து 104 வயதாகியும் தனது மகன் பராமரிப்பில் நலமுடன் உள்ளார். அவரது 104வது பிறந்தநாள் விழா வாடிப்பட்டியில் விமர்சையாக கொண்டாடப்பட்டது, மூதாட்டியின் மகன், மகள்கள், பேரன், பேத்திகள், … Read more

தல பாடலை தவறாக சொன்ன பிரபல சீரியல் நடிகை! கடுப்பான சக நடிகர்கள்..!

அஜித்திற்கு அடுத்ததாக ஆரம்பிக்க இருக்கும் விசுவாசம் படத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள் சினிமாத்துறையினர். அவருக்கு எவ்வளவு பெரிய ரசிகர்கள் இருக்கிறார்கள் என தியேட்டர்களில் ஓப்பனிங் டே சொல்லும். சமூகவலைதளத்தில் அதற்கும் மேல். இப்போதெல்லாம் விழாக்களோ, நிகழ்ச்சிகளோ, நேர்காணல்களோ ஒரு சில பிரபலங்கள் தவறாது அஜித்தின் பெயர் குறிப்பிடுவார்கள். பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் எங்கிட்ட மோதாதே நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் ராஜா ராணி சீரியல் பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள். இதில் நடிகை ஸ்ரீதேவிக்கு காதில் ஹெட் செட் … Read more

பிரமாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்க்கும் தல அஜீத் ..!

அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்கவிருப்பது அனைவரும் அறிந்தது தான். இந்த நிலையில் இப்படத்தை முடித்துவிட்டு இவர் யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. போனிகபூர் தயாரிக்கும் படத்தில் கூட இவர் நடிக்கலாம் என்று பல செய்திகள் உலா வந்தது, இந்நிலையில் தற்போது வந்துள்ள செய்தி ரசிகர்களை செம்ம குஷியாக்கியுள்ளது. அஜித்தின் அடுத்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் ஒரு செய்தி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இவை எந்த அளவிற்கு … Read more

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கதிகலங்க வைத்த இளம் நடிகை!

இப்போதெல்லாம் நடிகைகள் பட வாய்ப்புகளுக்காக சில டெக்னிக்களை கைவசம் வைத்திருக்கிறார்கள். அதில் ஒன்று அடிக்கடி கவர்ச்சி உடையில் இருப்பது போல புகைப்படங்களை வெளியிடுவது. இதில் சில நடிகைகள் நீச்சல் உடையில் படுகவர்ச்சி புகைப்படங்களை லீக் செய்ய தவறுவதில்லை. பிரபல நடிகைகளே இப்படி செய்யும் போது ஜூனியர் நடிகைகளுக்கு சொல்லவா வேண்டும். மும்பையை சேர்ந்தவர் நடிகை சீரத் கபூர். ராக் ஸ்டார் படத்தில் துணை நடன அமைப்பாளராக பணியாற்றினார். Zid என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர் … Read more