கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த தூத்துக்குடி இளைஞர் பத்திரமாக மீட்பு

Kodaikanal: கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த தூத்துக்குடி இளைஞர் மீட்பு மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த சில இளைஞர்கள் இன்று கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். கொடைக்கானலில் உள்ள டால்பின் நோஸ் சுற்றுலா பகுதிக்கு சென்ற அவர்கள், அங்கிருந்த ஒரு பாறையின் விளிம்பிலிருந்து செல்பி எடுக்க முயன்றனர். அப்போது, தன்ராஜ் என்ற … Read more

தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் இடையே புதிய ரயில் சேவை! தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி

Thoothukudi – Mettupalayam: தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் இடையே புதிய ரயில் சேவை துவங்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, வண்டி எண் 16766 வார நாட்களில் தூத்துக்குடியில் இருந்து வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது, இந்த விரைவு ரயில், இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு மதுரை வழியாக மறுநாள் காலை 6.18 மணிக்கு கோவை ரயில் நிலையம் வருகிறது, தொடர்ந்து காலை 7.15 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும் என கூறப்பட்டுள்ளது. Read More – வாகனப் … Read more

தூத்துக்குடி சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை.! ரூ.40,000 சம்பளம்.!

thoothukudi job vacancy

Thoothukudi : தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ், உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக உள்ள மாவட்ட திட்ட மேலாளர் மற்றும் தரவு உதவியாளர் ஆகிய பணியிடங்ளுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாத ஊதியத்தின் பேரில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இரண்டு காலியிடங்கள் 1. மாவட்ட திட்டமேலாளர் – 1 2. தரவு உதவியாளர் – 1 பணியிட விவரம் பணியிடங்களின் எண்ணிக்கை கல்வி தகுதி … Read more

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு… வேதாந்தா மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்..!

Sterlite

Sterlite: தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் போராட்டம் நடத்தினர். ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடசென்னை உயர் நீதிமன்றம் 2020-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல் மேல்முறையீடு செய்தது. இந்த மேல் மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து … Read more

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்..!

cmstalin

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நலத்திட்ட உதவிகளை வழங்கி பின்னர் முதல்வர் பேசுகையில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மக்கள் நலன் கருதி தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் சில அறிவிப்புகளை வெளியிடுவதில் நான்  மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் வேம்பாரில் 7 கோடி ரூபாய் மதிப்பில் வேம்பார் பனைபொருள்கள்  குறுங்குழுமம் அமைக்கப்படும். கோவில்பட்டி பகுதியில் 10 கோடி மதிப்பில் கோவில்பட்டி  கடலைமிட்டாய் குறுங்குழுமம் அமைக்கப்படும். தூத்துக்குடியில் … Read more

தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

MKSTALIN

தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சார வாகன தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். கடந்த மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் படி தூத்துக்குடியில்   வியட்நாம்  நாட்டைச் சோ்ந்த வின் ஃபாஸ்ட் என்ற நிறுவனம் மின்சார கார் தொழிற்சாலை அமைக்க முதலமைச்சர். மு க ஸ்டாலின் முன்னிலையில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில்  புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொழுத்தனது. இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி சில்லாநத்தம் … Read more

முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை தூத்துக்குடி வருகை..!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ள நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் பொருட்டு மின்சார வாகனத்தை உற்பத்தி செய்ய வியநட்நாமின் வின்பாஸ்ட் நிறுவனம் சார்பில் தூத்துக்குடியில் புதிய மின்கார் தொழிற்சாலை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ரூ. 16 ஆயிரம் கோடியில் இந்த ஒப்பந்தமானது கையெழுத்தானது. இதையடுத்து தூத்துக்குடி சிப்காட்டில் வின்பாஸ்ட் நிறுவனத்தின் கார் … Read more

ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல்..! தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி வரும் 28ஆம் தேதி தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார். அதன்படி குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார். நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது ரூ.550 கோடி மதிப்பீட்டில் ராமேஸ்வரம் பாம்பன் கடலின் நடுவே கட்டப்பட்ட புதிய ரயில்வே தூக்கு மேம்பாலத்தை திறந்து வைக்கவுள்ளார். இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் அனைத்து விண்வெளி திட்டங்களும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ராக்கெட் … Read more

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள்..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள மாசுவை அகற்றி சீர்செய்ய திட்டம் வகுக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கடந்த 2018-ல் தூத்துக்குடியில் மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். 100-வது நாள் போராட்டத்தின்போது கலவரம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தால் கடந்த 2018-ம் ஆண்டு ஆலை … Read more

கொந்தளிக்கும் அலை: தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.!

Tuticorin - fishing

தூத்துக்குடியில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடைவிதித்துள்ளது. வானிலை அறிவிக்கையின் படி, கேரள கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு … Read more