சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ‘வெற்றி நிச்சயம்’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து, அதற்கான இலச்சினையை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சி மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றியை உறுதி செய்யும் நோக்கத்துடன் நடைபெற்றது. தமிழ்நாட்டை வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கு இத்தகைய திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். நிகழ்ச்சிக்குப் பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு உரையாற்றினார். தமிழ்நாடு வளர்ச்சியில் முதல் […]
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும் அதற்கு திமுகவை சேர்ந்தவர்கள் பதில் அளித்து வருவதும் அரசியல் வட்டாரத்தில் வழக்கமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அந்த வகையில், இப்போது அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கும், திமுக-வுக்கும் கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா? என மிகவும் காட்டத்துடன் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இது குறித்து அவர் தன்னுடைய […]
சென்னை : ஈரோட்டில் இன்று வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை திறந்து வைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்திருந்தார். வருகை தந்த பிறகு கருதரங்கத்தை திறந்து வைத்துவிட்டு சில விஷயங்களையும் பேசினார். விழாவில் பேசிய அவர் ” வேளாண்மையும் உழவர் நலனும் நம்முடைய முதன்மையான கவனத்துக்கு உரியவை. அதனாலதான் வேளாண் துறையோட பெயரை ‘வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை’னு மாத்தியிருக்கோம். இது வெறும் பெயர் மாற்றம் இல்லை; நம்ம உழவர்களுக்கு மேம்பட்ட சேவைகளை, ஆதரவை கொடுக்கணும்ங்கிற நோக்கத்தோட செய்யப்பட்ட […]
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் ஏற்படக்கூடிய இயற்கை பேரிடர்களான கனமழை, வெள்ளம், புயல் போன்றவற்றை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றி பேச்சுவார்த்தை இந்த கூட்டத்தில் […]
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து இன்று இரண்டாவது முறையாக மலைப்பகுதி மேம்பாட்டு திறந்தவெளி மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை காரில் இருந்தபடி சந்தித்து அவர்களுடைய கேள்விகளும் பதில் அளித்தார். இது குறித்து பேசிய அவர் ” 5 நாள் பயணத்தில் மக்களை சந்திக்க கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது […]
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று இலங்கை அரசுடன் பேசி தமிழ்நாடு மீனவர்கள், அவர்தம் படகுகளை விடுவிக்க வலியுறுத்துமாறு கோரிக்கை வைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் . தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்கும் வகையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை விரைவில் மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், இலங்கை அரசுடன் பேசி, அந்நாட்டு சிறையில் வாடும் நமது மீனவர்களையும், அவர்களது […]
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள் பொதுக்கூட்டங்களும், நலத்திட்ட உதவிகளும் செய்து வருகின்றனர். இந்நிலையில், தனது பிறந்தநாளை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்று வீடியோ ஒன்றிய வெளியிட்டுள்ளார். அதில், “தமிழையும் தமிழர்களின் உரிமைகளையும் பாதுகாக்க, திமுக ஒரு போராட்டத்தைக் கையில் எடுத்தால் இந்தியாவை ஆட்சி செய்பவர்கள் அஞ்சுகிறார்கள், அலறுகிறார்கள். நம்மை நோக்கி தேசவிரோதிகள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். […]
அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகர் வடிவேலு, திடீரென சென்னையில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். நேற்றிரவு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேடையில் பேசிய நடிகர் வடிவேலு, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூத்த மகனாக உள்ளார் முதல்வர் ஸ்டாலின். வெற்றி திருமகள் முதல்வர் ஸ்டாலினை எந்நேரமும் பற்றிக்கொண்டிருக்கிறாள் என்பது நன்றாக தெரிகிறது. எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின்தான் வென்று ஆட்சியில் அமர்வார். 200 தொகுதிகளுக்கு மேல் தி.மு.க […]
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 5 விசைப்படகுகள், மீன்கள், வலைகளை பறிமுதல் செய்த கடற்படையினர் அவர்களை தலைமன்னார் கடற்கரை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த மாதத்தில் 29 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது கவனிக்கத்தக்கது. அதாவது, கடந்த 20-ம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 10 மீனவர்களும், கடந்த 9-ஆம் தேதி 19 பேரை […]
சென்னை : கல்விக்கு நிதி வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு தான் அரசியல் செய்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மும்மொழி விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், இன்னுமே தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், தமிழகத்தில் கல்வியை அரசியலாக்கக்கூடாது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். அதில், புதிய கல்விக் கொள்கை மீதான தமிழக அரசின் […]
சென்னை : ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று நடுக்கடலில் கைது செய்துள்ளனர். இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்ததாகக் கூறி 3 விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 10 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் தேதி எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 14 பேரை கைது செய்திருந்தது கவனிக்கத்தக்கது. இந்த நிலையில், இலங்கை கடற்படையால் 10 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் […]
சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் திமுகவிற்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. திமுக கூட்டணியின் வாக்கு சதவிகிதம் 52% ஆக உயர்ந்துள்ளது. இதை பார்த்து அதிமுக கலகலத்து போயுள்ளது எனவும் அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்த அவர், பாஜக, அதிமுக சேர்ந்து வந்தாலும் திமுக கூட்டணியை தோற்கடிக்க முடியாது என கருத்துக்கணிப்பில் […]
சென்னை : மத்திய பட்ஜெட் 2025-2026-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1-ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில், அடுத்ததாக மாநில பட்ஜெட் தமிழகத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக பட்ஜெட் குறித்தும், மற்ற சில முக்கிய திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் […]
திருநெல்வேலி : முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (7.2.2025) திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வழங்கி வைத்துவிட்டு இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் மத்திய அரசை விமர்சனம் செய்து சில விஷயங்களை பேசினார். இது குறித்து பேசிய அவர்” ஒன்றிய பாஜக அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் கூட்டணியில் இருக்கும் மாநில அரசுகளுக்கும், தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களுக்கு மட்டும்தான் திட்டங்களையும், நிதியையும் வழங்குவார்கள். கடந்த டிசம்பர் மாதம் […]
நெல்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று திருநெல்வேலிக்கு செல்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர், ரூ.9,368 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைப்பதுடன், டாடா சோலார் தொழிற்சாலையையும் திறந்துவைக்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பின்னர் கார் மூலம் காலை திருநெல்வேலிக்கு செல்கிறார். அங்கு அவருக்கு நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என். நேரு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. மேலும், பொதுமக்கள் முன்னிலையில் […]
சென்னை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என பல தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அரிட்டாபட்டி டங்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசின் இந்த மகிழ்ச்சியான அறிவிப்பை தொடர்ந்து, அரிட்டாப்பட்டி மக்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அது மட்டும் இல்லாமல், இது மதுரை மக்களுக்கு கிடைத்த […]
சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் அமையவுள்ள டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டங்ஸ்டன் திட்டத்தால், பல்லுயிர்ப் பெருக்க பாரம்பரிய தலமான அரிட்டாபட்டி முழுமையாக அழியும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசின் அர்ப்பணிப்பு மற்றும் இப்பகுதியின் பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, டங்ஸ்டன் விவகாரத்தில் மக்களின் உணர்வுக்கும், […]
சென்னை: 2025 பொங்கல் திருநாளையொட்டி 3186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ஆண்டு, காவல் துறையில் (ஆண்/பெண்) காவலர் நிலை-2, காவலர் நிலை-1, தலைமைக் காவலர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3000 பணியாளர்களுக்கு “தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்” வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் […]
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின் இரும்பு மூடி உடைந்ததில், அதன் மீது நின்று கொண்டிருந்த அக்குழந்தை, அதற்குள் விழுந்து இந்த சோக சம்பவம் நேரிட்டது. இந்நிலையில், விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பலியான சிறுமியின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்க முதல்வர்ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி […]
சென்னை: சென்னையில் நான்காவது முறையாக வேளாண் உழவர் நலத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள, செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை இன்று தமிழக முதல்வர் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைத்தார். இந்தக் மலர் கண்காட்சி இன்று முதல் தொடங்கி ஜனவரி 11 வரை, 10 நாட்கள் நடைபெறுகிறது, காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மலர் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம். இந்தக் கண்காட்சிக்காகவே ஊட்டி, கோவை, கிருஷ்ணகிரி, ஓசூர், கொடைக்கானல், கன்னியாகுமரி, மதுரை ஆகிய […]