ஸ்டெர்லைட் ஆலை வழக்கு… வேதாந்தா மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்..!

Sterlite

Sterlite: தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் போராட்டம் நடத்தினர். ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடசென்னை உயர் நீதிமன்றம் 2020-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல் மேல்முறையீடு செய்தது. இந்த மேல் மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து … Read more

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள்..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள மாசுவை அகற்றி சீர்செய்ய திட்டம் வகுக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கடந்த 2018-ல் தூத்துக்குடியில் மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். 100-வது நாள் போராட்டத்தின்போது கலவரம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தால் கடந்த 2018-ம் ஆண்டு ஆலை … Read more

ஸ்டெர்லைட் வழக்கு -விரைந்து விசாரிக்க மேல்முறையீடு..!

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி கடந்த 2018-ஆம் ஆண்டு  தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்  மூட நடவடிக்கை எடுத்த  நிலையில், இதற்கான அரசாணையை  தமிழக அரசு  பிறப்பித்திருந்தது. இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கு தொடரப்பட்டது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம்  திறக்க கோரிய … Read more

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு வழக்கு – சிபிஐ குற்றப்பத்திரிகையை நிராகரித்த நீதிமன்றம் ..!

case file

கடந்த சில வருடங்களுக்கு முன் தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி, தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 13பேர் காவல்துரையினரால் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. மதுரை உயநீதிமன்ற கிளை, இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துமாறு உத்தரவு பிறப்பித்ததையடுத்து, சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த நிலையில், சிபிஐ விசாரணையை முடித்து காவல் ஆய்வாளர் திருமலை என்பவர் மீது மட்டும் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் … Read more

ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு..!

தூத்துக்குடி ஆட்சியரிடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் மனு அளித்துள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் புகைப்படங்களுடன் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தில், மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி, தூத்துக்குடி ஆட்சியரிடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு மற்றும் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் … Read more

ஸ்டெர்லைட் ஆலையை வாங்க முன்வந்துள்ள 7 நிறுவனங்கள்..! – வேதாந்தா

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வாங்குவதற்கு 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தகவல் அளித்துள்ளார். தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்பால்,தூத்துக்குடி மக்கள் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்தினர். அந்த வகையில், கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு மே 28 … Read more

#BREAKING: வேதாந்தா நிறுவன விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவு!

ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளை அகற்ற அனுமதி கோரிய வேதாந்தா நிறுவன விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவு. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளை அகற்ற அனுமதி கோரிய வேதாந்தா நிறுவன விண்ணப்பத்தை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை செயலர் பரிசீலித்து 3 மாதத்தில் உரிய முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. இதுதொடர்பாக வேறு நபர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதையும் பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளை அகற்ற அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் … Read more

#Breaking:ஸ்டெர்லைட் ஆலை விற்பனை – வேதாந்தா நிறுவனம் திடீர் அறிவிப்பு!

தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்பால்,தூத்துக்குடி மக்கள் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்தினர்.அந்த வகையில்,கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து,2018,மே 28 ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில்,தூத்துக்குடியில் உள்ள தங்களது ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வதாக வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு விடுத்துள்ளது. … Read more

#BREAKING: துப்பாக்கி சூடு வழக்கு.. 64 பேர் ஆஜர்.. ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு வழக்கு தொடர்பாக இன்று 64 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர். தூத்துக்குடி துப்பாக்கிசூடு வழக்கு விசாரணையை ஜூன் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு வழக்கு தொடர்பாக இன்று 64 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினர். கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியதால் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த போராட்டம் தொடர்பாக … Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூடு:இன்று 4-ஆம் ஆண்டு நினைவு தினம்!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இன்று 4-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக,கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.இதில்,13 பேர் பரிதாமாக கொல்லப்பட்டனர்.இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில்,தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இன்று 4-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.இந்த நிலையில்,காவல் சட்டம் நடைமுறையில் உள்ளதால் வெளி மாவட்டத்தினர் கலந்து கொள்ள அனுமதியில்லை … Read more