கனமழையால் கேதார்நாத் யாத்திரை பாதையில் நிலச்சரிவு - 13 பேர் மாயம்!

Aug 4, 2023 - 07:04
 0  2
கனமழையால் கேதார்நாத் யாத்திரை பாதையில் நிலச்சரிவு - 13 பேர் மாயம்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதார்நாத் யாத்திரை செல்லும் பாதையில் நேற்றிரவு பெய்த கனமழையால் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதில் 13 பேர் காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மூலம் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர் கனமழை காரணமாக மலைப்பகுதிகளில் இருந்து ஆங்காங்கே விழும் பாறைகளால் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக பேரிடர் மீட்புப் படை வேதனை தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், உத்தரகண்ட் மாநிலத்தில் இன்றும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், பவுரி, டெஹ்ரி, ருத்ரபரயாக் மற்றும் டேராடூன் ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சாமோலி, நைனிடால், சம்பாவத், அல்மோரா மற்றும் பாகேஷ்வர் ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow