மார்கழியில் மக்களிசை மேடையில் ஜாலியாக நடனம் ஆடி அசத்திய இயக்குனர் பா.ரஞ்சித்.!

Dec 25, 2023 - 10:31
 0  1
மார்கழியில் மக்களிசை மேடையில் ஜாலியாக நடனம் ஆடி அசத்திய இயக்குனர் பா.ரஞ்சித்.!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத உச்ச இயக்குநரான பா.ரஞ்சித் குத்தாட்டம் போட்டு வைப் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூரில் மார்கழி மக்களிசை என்ற கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அவர், மேடையில் ஏறி சக கலைஞர்களுடன் ஜாலியாக குத்தாட்டம் போட்டு அசத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், மேளத்திற்கு சிறு பயன் போல் செம ஆட்டம் போட்டுள்ளார்.

 

View this post on Instagram
 

A post shared by Behindwoods (@behindwoodsofficial)

தொடர்ந்து மூன்றாவது முறையாக நடைபெறும் இந்த மார்கழி மக்களிசை நிகழ்ச்சி நடைபெற்று வருவதாகவும், இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நிலையில், இந்த நிகழ்ச்சியை பரவலாக ப்ரோமோஷன் செய்துள்ளார்.

மூன்றே நாட்களில் 402 கோடி! ‘சலார்’ படத்தின் மிரட்டல் வசூல்!

இயக்குனர் பா.ரஞ்சித்  சியான் விக்ரமை வைத்து ‘தங்கலான்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் இணைந்து தயாரித்துள்ள படம், கோலார் தங்க வயல் பின்னணியை கதைக்களமாக கொண்ட, உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow