இன்று இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Schools - holiday

தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி இணைந்த நாளான இன்று, கன்னியாகுமரி தினம் கொண்டாட படுகிறது. இன்று 67-வது அகவையில் அடியெடுத்து வைக்கும் இந்நன்னாளை முன்னிட்டு  இன்று  மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல் மாவட்டம் மலைக்கோட்டையின் கீழ் நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் வழியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நாமக்கல் தாலுகாவுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இன்று (நவம்பர் 1ம் தேதி) விடுதலை நாள் கொண்டாட்டம் மற்றும் நாளை … Read more

கடலூரில் பரபரப்பு…! கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட 12-ஆம் வகுப்பு மாணவன்..!

Murder

கடலூர் மாவட்டம் புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவருக்கு ஜீவா என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இவர் விருத்தாச்சலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். மேலும் அதே ஊரை சேர்ந்த சுப்ரமணி என்பவரின் மகன் ஆனந்த் மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை ஜீவா பள்ளிக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு சென்று ஆனந்த் அவரிடம் பேசிய போது, இருவருக்கும் இடையே … Read more

ஆசிரியர் சிறுநீர் கழிக்க விடவில்லை என காவல்துறையினரிடம் புகார் அளித்த மாணவன்..!

ஆசிரியர் சிறுநீர் கழிக்க விடவில்லை என போலிஸாரிடம் புகார் அளித்த நான்காம் வகுப்பு மாணவன்.  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவரது மகன் தர்மசுதன். இவர் அதே பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில், மாணவர்களுடன் ஏற்பட்ட சண்டையில், தர்மசூதனை ஆசிரியர் கண்டித்ததையோடு, அவரை, பள்ளி வகுப்பறையில் அமர வைத்துள்ளார். 11 மணியளவில் இடைவேளையின் போதும் மாணவ மாணவிகள் அனைவரும் வெளியே சென்றுள்ளனர். ஆனால் ஆசிரியர் தர்மசுதனை … Read more

ஆசிரியரை கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்க்கும் சிறுவன் வைரலாகும் வீடியோ!!

தன் பள்ளி ஆசிரியையை கட்டிப்பிடித்து, தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க்கும் சிறுவன் வைரலான வீடியோ!! ஒரு சிறுவன் தான் செய்த தவறுக்காக தனது வகுப்பு ஆசிரியரிடம் கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்க்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், சிறுவன் தனது ஆசிரியரிடம் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கிறான், ஆனால் ஆசிரியர் ஏற்க மறுக்கிறார் சிறிது விவாதத்திற்கு பிறகு ஆசிரிரை கட்டிப்பிடித்தும் முத்தம் கொடுத்தும்  சமாதானபடுத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளது. மேலும் … Read more

தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி – மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பிவைப்பு..!

தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.  விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டியில் தனியார் பொறியியல் கல்லூரி என்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ரம்யா என்ற மாணவி இளங்கலை மருந்தகவியல் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த நிலையில் திடீரென்று கல்லூரி முதல் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சி  செய்துள்ளார். கல்லூரியில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி … Read more

#Shocking:இந்தியாவில் முதல் ‘குரங்கு அம்மை’ தொற்று? – மாணவர் மருத்துவமனையில் அனுமதி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில்,தற்போது பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை தொற்றும் தீவிரமாக பரவி வருகிறது.குறிப்பாக,ஆப்பிரிக்கா,ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் குரங்கு அம்மை பரவியுள்ளது. குரங்கு அம்மையின் முதற்கட்ட அறிகுறிகளாக காய்ச்சல்,உடல் வலி,தலைவலி போன்றவை ஏற்படும் என்றும்,இதனைத்தொடர்ந்து 3 நாட்களுக்கு உடல் முழுவதும் சிவப்பு புள்ளிகளும்,அதன்பின்னர் அவை கொப்புளங்களாக மாறும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில்,கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவருக்கு குரங்கு … Read more

‘புளியங்குளத்திலிருந்து பாயும் புதிய குட்டிப்புலி’ – எல்லோரும் சமம் தானே டீச்சர்..! மாணவனுக்கு பாராட்டு தெரிவித்த திருமாவளவன்..!

பிஞ்சு உள்ளத்தில் நஞ்சைத் தூவும் இழிசெயலுக்கு எதிர்வினையாக.. எல்லோரும் சமம் தானே டீச்சர் என.. பாடம் புகட்டிய பள்ளி மாணவனுக்கு எமது நெஞ்சார்ந்த பாராட்டுகள் என திருமாவளவன் ட்வீட்.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூரில் அரசு மேல் நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் வருகின்ற 7 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் பள்ளி துணைத் தலைமை ஆசிரியர் … Read more

#Breaking:அதிர்ச்சி சம்பவம்…பள்ளியில் ரிவர்சில் வந்த வேனால் 2 ஆம் வகுப்பு மாணவர் பலி!

சென்னை:வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனால் மாணவர் பலி. சென்னை,வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனால் மாணவர் பலியான அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பள்ளி வளாகத்தில் வேன் நின்ற பின்னர் 2 ஆம் வகுப்பு மாணவர் திக்சித் நடந்து சென்றபோது ரிவர்சில் வந்த வேன் மோதி விபத்து ஏற்பட்டதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில்,தான் தவற விட்ட பொருள் ஒன்றை எடுக்க பள்ளி வேனில் … Read more

ஆசிரியரின் செயல் கண்டிக்கத்தக்கது – ராமதாஸ் ட்வீட்!

கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவனை ஆசிரியர் தாக்கியது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம். கோவை மாவட்டம் கணபதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் நேற்று 11ஆம் வகுப்பு மாணவனை அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் வகுப்பறையில் கடுமையாக அடித்ததாக கூறப்படுகிறது. மாணவனுக்கு பள்ளியில் கொடுக்கப்பட்ட சீருடையை ஆல்ட்டர் செய்து இறுக்கமாக அணிந்திருந்ததால் ஆசிரியர் சுமார் 20 நிமிடங்கள் வைத்து அடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, வீட்டுக்கு சென்ற மாணவனுக்கு கடுமையான வலி ஏற்பட்டிருக்கிறது. பின்னர் பெற்றோர்கள் விசாரித்ததில் … Read more

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.., பள்ளி ஆசிரியருக்கு 3 ஆண்டு சிறை..!

2018 ஆம் ஆண்டு மாணவியை பாலியல் துன்புறுத்திய வழக்கில் பள்ளி ஆசிரியர் ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு  மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை பெற்றவர் சின்ச்வாட்டைச் சேர்ந்த நிவ்ருத்தி தேவ்ரம் கல்போர் (53) என தெரியவந்துள்ளது. அந்த ஆசிரியர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி புகார் செய்தார். அதன் அடிப்படையில் கடந்த 2018 ஆண்டு அக்டோபர் 12- ஆம் தேதி  கைது செய்யப்பட்டு, அக்டோபர் 22, 2018 அன்று போலீஸ் காவலில் இருந்து … Read more