+2 தேர்ச்சி விகிதம்.! எந்த மாவட்டம் முதலிடம்.? எந்த மாவட்டம் கடைசி இடம்.?

May 8, 2023 - 06:00
 0  1

+2 பள்ளி தேர்ச்சி விகித அடிப்படையில் முதலிலத்தில் விருதுநகர் மாவட்டம் உள்ளது. கடைசி இடத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் உள்ளது. 

தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் +2 வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிந்தது. இந்த பொதுத்தேர்வினை 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. பதிவெண், பிறந்த தேதி கொண்டு மாணவ மாணவியர்கள் தங்கள் மதிப்பெண்களை அறிந்து வருகின்றனர்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 94.03% பேர் தேர்ச்சி எனவும், அதில் மாணவிகள் 96.38% பேரும், மாணவர்கள் 91.45% பேரும் தேர்ச்சி என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

இதில் மாவட்ட வாரியாக +2 தேர்ச்சி விகிதம் அடிப்படையில், விருதுநகர் 97.85 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் திருப்பூர் மாவட்டம் 97.79 சதவீதத்துடனும், பெரம்பலூர் 97.59 சதவீதத்துடன் 3ஆம் இடத்திலும் உள்ளது.

நான்காம் இடத்தில் கோவை 97.57 சதேவீதத்துடனும், தூத்துக்குடி மாவட்டம் 97.37 சதவீதத்துடன் 5ஆம் இடத்திலும் உள்ளது. 6ஆம் இடத்தில், சிவகங்கை 97.26 சதவீதத்துடனும், அடுத்தடுத்த இடங்களில் கன்னியகுமரி 97.05 சதவீததுடன் ஆட்டுத்த இடத்திலும், தலைநகர் சென்னை 94.14 சதவீத தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளது. மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதத்தில் ராணிப்பேட்டை 87.30 சதவீதத்துடன் கடைசி இடம் பிடித்துள்ளது.

அரசு பள்ளியில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டமாக திருப்பூர் அமைந்துள்ளது. அங்கு, அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 96.45 சதவீதமாகும். பள்ளிகள் வாரியாக, பெண்கள் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 96.04 சதவீதம் எனவும், இருபாலர் பள்ளியானது 94.39 சதவீத தேர்ச்சி எனவும், ஆண்கள் பள்ளிகள் 87.79 சதவீத தேர்ச்சி எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதமானது 89.80 சதவீதம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow