பல் பிடுங்கிய விவகாரம் - பாதிக்கப்பட்டவர்கள் அச்சுறுத்தப்பட்டிருப்பார்கள் - நயினார் நாகேந்திரன்

Apr 14, 2023 - 06:45
 0  1

பற்களை பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அச்சுறுத்தப்பட்டிருப்பார்கள் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் குற்றசாட்டு. 

நெல்லையில் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடிங்கிய விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மார்ச் 29ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணையை மேற்கொள்ள ஐஏஎஸ் அதிகாரி அமுதா நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணை கைதிகளின் பற்களை பிடிங்கி துன்புறுத்திய விவகாரம் தொடர்பாக, அடுத்த கட்ட விசாரணை வரும் 17,18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் அச்சுறுத்தப்பட்டிருப்பார்கள்

இந்த நிலையில், பற்களை பிடுங்கிய விவகாரம் குறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அவர்கள் கூறுகையில், பற்களை பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அச்சுறுத்தப்பட்டிருப்பார்கள். விசாரணை அதிகாரி அமுதாவிடம் பாதித்தவர்கள் சாட்சி சொல்ல முன்வராதது போல தெரிகிறது. இந்த விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை தேவை என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow