தலைமை மருத்துவரை கட்டிப்போட்டு 100 சவரன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்கள்..!

Apr 14, 2023 - 05:25
 0  2

பழனியில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை

பழனியில் இன்று காலை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மருத்துவரை கொள்ளையர்கள் தாக்கி உள்ளனர்.

அதனை தொடர்ந்து, அவரை கட்டிப்போட்டு வீட்டிலிருந்த 100 சவரன் நகை மற்றும் 20 லட்சம் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். கொள்ளையர்கள் தாக்கியதில்  காயமடைந்த மருத்துவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, முகமூடி அணிந்து வந்த மூன்று கொள்ளையர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow