தாம்பரத்தில் வரும் 30ம் தேதிக்குள் சொத்துவரியை செலுத்துபவர்களுக்கு வரித்தொகையில் 5% ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2023-2024-ம் ஆண்டின், முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை வரும் 30.04.2023-தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு சொத்து வரித் தொகையில் 5 சதவிகிதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என தாம்பரம் மாநகராட்சி அறிவித்துள்ளது.
மேலும், இதில் ஒரு வரிவிதிப்பு எண்ணிற்கு அதிகபட்சமாக ரூபாய் 5,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். எனவே பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி 30.04.2023 க்குள் சொத்து வரியினை செலுத்திடுமாறு தாம்பரம் மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.