டெல்லியில் 20-வது காவிரி ஆணைய கூட்டம் தொடங்கியது..!

Apr 11, 2023 - 06:43
 0  0

டெல்லியில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 20-வது கூட்டம் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கியது. 

டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 20வது கூட்டம் எஸ்.கே.ஹல்தர் தலைமையில், டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் தொடங்கியது.

இந்த கூட்டத்தில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். ஜூன் மாதம் தொடங்கும் பாசன ஆண்டுக்கான நீர் திறப்பு குறித்து, கோடைகால நீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow