அதாவது, ஆப்பிள் நிறுவனத்தின் Apple BKC-என்ற முதல் ஸ்டோர் ஏப்ரல் 18 ஆம் தேதி காலை 11:00 மணிக்கு திறக்கப்படும் என்றும், பின்னர் Apple Saket ஸ்டோர் ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 10:00 மணிக்கு திறக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு விதிவிலக்கான இந்த சேவையின் மூலம் தயாரிப்புகளை தேடவும், கண்டறியவும் மற்றும் வாங்கவும் எளிதாக இருக்கும் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அந்த வகையில், கடந்த 2020ம் ஆண்டில் உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆன்லைன் சில்லறை விற்பனைக் கடையை அறிமுகப்படுத்திய கலிபோர்னியாவைச் சேர்ந்த குபெர்டினோ நிறுவனத்திற்கு இந்தியா ஒரு போட்டியாக மாறியுள்ளது.
இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை, 2021-ல் கொரோனா காரணமாக, ஆப்பிள் நிறுவனம் நாட்டில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளைத் திறப்பதில் சிரமங்களை எதிர்கொண்டது.
இருப்பினும், ஆப்பிள் தயாரிப்புகள் இந்தியாவில் பல ஆண்டுகளாக Amazon.com Inc மற்றும் Walmart Inc இன் Flipkart போன்ற இ-காமர்ஸ் தளங்களிலும் மறுவிற்பனையாளர்கள் மூலமாகவும் விற்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் முதல் ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில், மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் டிரைவ் மாலில் உள்ள Apple BKC, ஆப்பிள் சீரிஸ் “Mumbai Rising”-ன் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.