டெல்லியில் அடுத்த அமைச்சருக்கு டார்கெட்… சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை!

Kailash Gahlot

Delhi: டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட்டிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2021-2022 காலகட்டத்தில் டெல்லியில் அமல்படுத்தப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான கொள்கை திட்டம் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பீடு ஏற்பட்டதாக குற்றசாட்டு எழுந்த நிலையில், முறைகேடு மற்றும் ஊழல் நடைபெற்று இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வழக்கு பதவி செய்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அதேசமயம். இந்த வழக்கில் சட்ட விரோத … Read more

அகிலேஷ் யாதவுக்கு சம்மன் அனுப்பிய சிபிஐ..!

Akhilesh Yadav

Akhilesh Yadav:  சட்டவிரோத சுரங்க வழக்கில் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) இன்று (புதன்கிழமை) சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ கடந்த 2019 ஜனவரி 2-ஆம் தேதி இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது. READ MORE- பரபரக்கும் இமாச்சல் பிரதேச அரசியல்.! … Read more

அமைச்சர் அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன்! நேரில் ஆஜராக உத்தரவு..

ponmudi

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரும் 30ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த ஜூலை மாதம் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுபோன்று மணல் குவாரி விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் 10 பேருக்கும் சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை. 2006 முதல் 2011 காலகட்டத்தில் கனிமவளத் துறை அமைச்சராக இருந்த அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் … Read more

#BREAKING: அமலாக்கத்துறை சம்மன்: கூடுதல் அவகாசம் கோரினார் ராகுல் காந்தி…!

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்காக ஆஜராக கூடுதல் அவகாசம் கேட்கும் ராகுல் காந்தி. நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் டெல்லி அமலாக்கத்துறையினர் இதுவரை 3 நாட்கள் விசாரணை நடத்தினர்.  மொத்தமாக 28 மணி நேரம் அமலாக்கத்துறை, ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்திய நிலையில், வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்காக ஆஜராக கூடுதல் அவகாசம் அளிக்குமாறு கோரி ராகுல் காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். … Read more

#BREAKING: கருமுட்டை விற்பனை விவகாரம் – ஆந்திரா, கேரளா மருத்துவமனைகளுக்கும் சம்மன்!

சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்தது தொடர்பாக ஆந்திரா, கேரளா மருத்துவமனைகளுக்கு சம்மன். ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்தது தொடர்பாக 5 மருத்துவமனைகளில் மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. தற்போது ஒவ்வொரு மருத்துவமனையிலும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆந்திரா, கேரளா மருத்துவமனைகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஏற்கனவே, சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில், சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஈரோடு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஆவணங்களுடன் இன்று நேரில் … Read more

#JustNow: சிறுமியின் கருமுட்டை விற்பனை – 2 மருத்துவமனைக்கு சம்மன்!

கருமுட்டை விற்பனை தொடர்பாக சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஈரோடு போலீஸ் சம்மன்.  ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில், சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஈரோடு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஆவணங்களுடன் நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க இரு தனியார் மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. கருமுட்டை விற்பனை தொடர்பாக சிறுமியின் தாய் உள்ளிட்ட பேர் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு, பெருந்துறை, சேலம், திருப்பதி, திருவனந்தபுரம் … Read more

நபிகள் குறித்து சர்ச்சை கருத்து:நுபுர் சர்மாவுக்கு மும்பை காவல்துறை அனுப்பிய சம்மன்!

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா,இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக புகார் எழுந்தது.இது சர்வதேச அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில்,இஸ்லாமிய நாடுகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இதனைத்தொடர்ந்து,நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால்,பாஜகவின் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து,நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக பேசும் வகையில் ட்விட் செய்ததாக பாஜகவின் … Read more

நடிகர் விஜய் சேதுபதிக்கு சம்மன்!

நடிகர் மகாகாந்தி தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் நடிகர் விஜய் சேதுபதிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன். பெங்களூரு விமான நிலைய சம்பவம் தொடர்பான அவதூறு வழக்கில் நடிகர் விஜய் சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர் மகா காந்தி என்பவர் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில், ஜனவரி 4 -ஆம் தேதி ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதாக … Read more

சிம்புவால் ஈஸ்வரன் படத்தில் பயன்படுத்தப்பட்ட பாம்பு – நேரில் சம்மன் அனுப்ப வனத்துறையினர் முடிவு!

சிம்புவால் ஈஸ்வரன் படத்தில் பாம்பு பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக படக்குழுவினருக்கு நேரில் சம்மன் அனுப்ப வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் மாதவன் மீடியாவின் தயாரிப்பில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் தான் ஈஸ்வரன். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், காதல், சென்டிமென்ட், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சிம்புவுடன் நிதி அகர்வால் மற்றும் பாரதிராஜா … Read more