#BREAKING: அமலாக்கத்துறை சம்மன்: கூடுதல் அவகாசம் கோரினார் ராகுல் காந்தி…!

#BREAKING: அமலாக்கத்துறை சம்மன்: கூடுதல் அவகாசம் கோரினார் ராகுல் காந்தி…!

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்காக ஆஜராக கூடுதல் அவகாசம் கேட்கும் ராகுல் காந்தி.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் டெல்லி அமலாக்கத்துறையினர் இதுவரை 3 நாட்கள் விசாரணை நடத்தினர்.  மொத்தமாக 28 மணி நேரம் அமலாக்கத்துறை, ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்திய நிலையில், வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்காக ஆஜராக கூடுதல் அவகாசம் அளிக்குமாறு கோரி ராகுல் காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். தன் தாயார் சோனியா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதனால் ஆஜராக தனக்கு கூடுதல் அவகாசம் தர அமலாக்கத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார் ராகுல் காந்தி. வரும் திங்கட்கிழமை வரை கால அவகாசம் அளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *