Mumbai: வீட்டின் ரகசிய அறையில் இருந்து 26 பெண்கள் மீட்பு.. 4 பேர் கைது!

மும்பையில் வீட்டின் உள்ளே பிரத்யேகமாக கட்டப்பட்ட ரகசிய அறையில் இருந்து 26 பெண்களை மீட்ட காவல்துறை. மகாராஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பையில் ஒரு வீட்டின் உள்ளே பிரத்யேகமாக கட்டப்பட்ட குழியில் (ரகசிய அறை) அடைத்து வைக்கப்பட்டிருந்த 26 பெண்களை மும்பை போலீசார் மீட்டுள்ளனர். அங்கு வணிகரீதியாக சதை (flesh trade racket) வியாபாரம் அதாவது விபசாரம் நடந்தாக கூறப்படுகிறது. இந்த சோதனைக்குப் பிறகு மோசடியில் ஈடுபட்ட மூன்று பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். … Read more

நபிகள் குறித்து சர்ச்சை கருத்து:நுபுர் சர்மாவுக்கு மும்பை காவல்துறை அனுப்பிய சம்மன்!

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா,இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக புகார் எழுந்தது.இது சர்வதேச அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில்,இஸ்லாமிய நாடுகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இதனைத்தொடர்ந்து,நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால்,பாஜகவின் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து,நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக பேசும் வகையில் ட்விட் செய்ததாக பாஜகவின் … Read more

23 ஆண்டுகளுக்கு பின் மும்பை போலீசாரிடம் பிடிபட்ட வைர கடத்திய நபர்!

23 ஆண்டுகளுக்கு பின் மும்பை போலீசாரிடம் பிடிபட்ட வைர கடத்திய நபர். பரேஷ் ஜாவேரி சிங்கப்பூரிலிருந்து மூல தங்கம் மற்றும் வைரங்களை இறக்குமதி செய்வார். ஆனால் வரி செலுத்துவதைத் தவிர்த்து வந்துள்ளார். இது தொடர்பாக அமலாக்க இயக்குநரகம், ஒரு விசாரணையைத் தொடங்க உத்தரவிட்டது. அந்த நபருக்கு தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இவர் தலைமறைவாக இருந்துள்ளார். இதனையடுத்து,  53 வயதான  பரேஷ் ஜாவேரி  மும்பை போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில், மும்பை குற்றப்பிரிவு போலீசார், 23 ஆண்டுகளுக்குப் … Read more

சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம்.! சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக மேலாளர் ரேஷ்மாவிடம் விசாரணை.!

மறைந்த சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக பிரபல மேலாளரான ரேஷ்மா ஷெட்டியிடம் சுமார் 4 முதல் 5 மணி நேரம் வரை மும்பை போலீசார் விசாரணை நடத்தினர். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுஷாந்த் சிங் . இந்நிலையில், கடந்த ஜூன் 14 அன்று … Read more