அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கைது!

RB Udayakumar

RB Udhayakumar: மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் கைது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உரம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அப்பகுதியில் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுபடுவதாக அப்பகுதி கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கழிவு நீரால் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர். இதனால் நடந்து முடிந்த மக்களவை தேர்தலை புறக்கணிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக … Read more

ஹர்திக் பாண்டியாவை ஏமாற்றி ரூ.4.3 கோடி மோசடி… கைதான சகோதரர் வைபவ் பாண்டியா!

Vaibhav Pandya

Hardik Pandya: ஹர்திக் பாண்டியா ஏமாற்றி ரூ.4.3 கோடி மோசடி செய்த அவரது சகோதரர் வைபவ் பாண்டியா கைது செய்யப்பட்டார். இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியாவின் பெரியப்பா மகனான வைபவ் பாண்டியா பிசினஸில் மோசடி செய்ததால் மும்பை காவல்துறை கைது செய்தது. கடந்த 2021ம் ஆண்டு முதல் மும்பையில் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியாவுடன் இணைந்து அவர்கள் சகோதரரான வைபவ் பாண்டியா பாலிமர் வியாபாரம் நிறுவனத்தை நடத்தி வந்தார். … Read more

ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!

Students Union

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்வதற்காகத் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி இன்று அங்கு சென்றுள்ளார். இந்த சூழலில், முறைகேடு வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என பல்கலைக்கழக ஊழியர் சங்கம் விடுத்த கோரிக்கையை ஏற்காமல் ஆளுநர் ரவி, இன்று துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசுவதாக கூறி பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி, சேலத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு … Read more

நடிகை கௌதமி அளித்த புகாரில் 6 பேர் கைது.!

Actress Gowthami Case

நடிகை கௌதமி அளித்த நில அபகரிப்பு புகாரில் 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். தனக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, கோட்டையூர் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மோசடியாக விற்றுவிட்டதாக, நடிகை கௌதமி சென்னை மாநகர ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். தற்போது, நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் முக்கிய நபரான அழகப்பன், அவரது மனைவி நாச்சியம்மாள், சதீஷ்குமார் உட்பட 6 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார்கைது செய்தனர். முன்னதாக நடிகை … Read more

ஐயப்ப பக்தர் போல் வலம் வந்த கோவை நகைக்கடை கொள்ளையன் கைது.. துணை ஆணையர் விளக்கம்!

Deputy Commissioner

கோவை காந்திபுரம் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான விஜய் கைது குறித்து கோவை மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்தார். கடந்த 28ம் தேதி கோவையில் காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் சுமார் 5.16 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்த்தியை ஏற்படுத்தியது. கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது. இதில் … Read more

புஷ்பா பட நடிகர் ஜெகதீஷ் அதிரடி கைது…காரணம் என்ன தெரியுமா.?

Jagadeesh Prathap Bandari

அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளிவந்து மிக்பெரிய ஹிட் கொடுத்த புஷ்பா படத்தில் அவருக்கு நண்பனாக நடித்த நடிகர் ஜெகதீஷ் திடீரென கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துணை நடிகை ஒருவர், தனது ஆண் நண்பருடன் தனிமையில் இருந்தபோது அதனை புகைப்படம் எடுத்து நடிகர் ஜெகதீஷ் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்த நடிகை கடந்த மாதம் 29ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஜெகதீசனை போலீசார் தற்போது கைது … Read more

இந்து மக்கள் கட்சியின் மாநகர துணைத் தலைவர் கைது!

முதியவரிடம் மிரட்டி பணம் பறித்த வழக்கில் இந்து மக்கள் கட்சி மாநகர துணைத் தலைவர் மகேஷ் கைது. சென்னை திருவல்லிக்கேணியில் முதியவர் சங்கர் என்பவரிடம் மிரட்டி பணம் பறித்த வழக்கில் இந்து மக்கள் கட்சி மாநகர துணைத் தலைவர் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். டாக்டர் நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு வசிக்கிறார் முதியவர் சங்கர். இவரிடம் மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது. மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைதானது உள்பட மகேஷ் மீது … Read more

கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 2 பேர் கைது.!

கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் மேலும் 2 பேர் கைது. கோவையில் கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேலும் 2 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்தனர். கார் வெடிப்பு வழக்கில் ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக கோவையை சேர்ந்த சேக் இதயத்துல்லா மற்றும் சனோபர் அலி ஆகிய இருவரை … Read more

மும்பையில் 40 புறாக்களை திருடிய நபர் கைது.!

மும்பையில் 40 ஹோமிங் புறாக்களை திருடியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  மும்பையின் குர்லாவில் (கிழக்கு) உள்ள சால்லில் “அகமது சயாத் என்பவர் தனது குழந்தைகளுக்காக புறாக்களை  வாங்கி அவற்றை ஒரு பொழுதுபோக்காக பயிற்றுவித்துள்ளார்” ஒவ்வொரு புறாவின் மதிப்பும் ₹2,000க்கு மேல் என்று சயாத் கூறினார். நவம்பர் 7-ம் தேதி இரவு நடந்துள்ள இந்த திருட்டை காவல்துறையினர் விசாரித்தபோது, அதே பகுதியில் வசிக்கும் ஜீஷன் கான் என்பவர்தான் இந்த திருட்டில் ஈடுபட்டது என்றும் திருடிய புறாக்களை அதிக விலைக்கு … Read more

சிறுமி கூட்டு பலாத்காரம் – 6 பேர் கைது!

புனேவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் 6 பேர் கைது. புனேவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ததாக 6 பேரை புனே நகர போலீசார் கைது செய்துள்ளனர். காவல்துறையின் அறிக்கையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ஆரம்பத்தில் அந்த சிறுமியை கத்தி முனையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தி புகைப்படங்களை எடுத்ததாக கூறப்பட்டுள்ளது. குற்றவாளிகள் 6 பேரும் அந்த புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை … Read more