எல்லையில் பரபரப்பு!! நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கைது !!

ஓசூரில் நாம் தமிழர் கட்சியினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்டம்  மாநில எல்லை முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூர் லால் (( LAL )) பேருந்து நிறுத்தத்திலிருந்து இ.எஸ்.ஐ மருத்துவமனை வரை ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் பேரணியாகச் சென்றனர்.  கர்நாடக – தமிழக எல்லையை முற்றுகையிடும் நோக்கில் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழக-கர்நாடக … Read more

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவினர்…!!

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவினர் டெல்லி அருகே உள்ள பாதார்பூரில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அந்த குற்றவாளி இடமிருந்து ஒரு கைத்துப்பாக்கியும் ,மூன்று தோட்டாக்கள் கொண்ட cartridgesயும் கைப்பற்றப்பட்டது.ஏற்கனவே இந்த ரவுடி குறித்த தகவல்களை அளிப்பவர்களுக்கு ரூ.50,000 வெகுமதி அளிக்கப்படும் என காவல் துறை அறிவித்திருந்தது.

மும்பை வெடிகுண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராகிம்மின் கூட்டாளி பரூக் தக்லா கைது

1993 மும்பை தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய தாவூத் இப்ராகிம்மின் நெருங்கிய கூட்டாளி பரூக் தக்லா கைது. பரூக் தக்லாவை சிறப்பு காவல்துறையின் படை தேடிக்கொண்டிருந்த வேளையில், துபாயில் பதுங்கி இருப்பதை அறிந்த மும்பை காவல்துறையினர்,துபாய் சென்று அவரை கைது செய்தனர். இந்நிலையில் துபாயில் கைது செய்யப்பட்ட கூட்டாளி பரூக் தக்லா மும்பை தடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்ட கர்ப்பிணி பெண் உஷாவின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடியவர்கள் கைது…??

திருச்சி கணேசா ரவுண்டானா அருகில் ஹெல்மெட் சோதனையின் போது ஹெல்மெட் அணியாமல் சென்ற ஒரு கணவன் மனைவி துரத்தி சென்ற காமராஜ் SI_ பிடிக்க முடியாமல் எட்டி உதைத்ததில் – உஷா என்ற 3 மாத கர்ப்பிணி பெண் துடிதுடித்து இறந்து உள்ளார் – அவர் கணவர் படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூரில் இறந்த கர்ப்பிணி உஷாவுக்கு நீதி கேட்டு போராடிய 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கு நின்று … Read more

மதுரையில் காதலிக்க மறுத்ததால் தீவைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…!!

மதுரை மாவட்டத்தில் கடந்த 16ம் தேதி திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டையில் காதலிக்க மறுத்ததால் தீவைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சித்ராதேவியை பாலமுருகன் என்ற வாலிபர் தீவைத்து எரித்தார். இந்நிலையில் தீவைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சித்ராதேவி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். சித்ராதேவி மீது பெட்ரோலை ஊற்றி எரித்த பாலமுருகன் ஏற்கனவே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூல் மூலம் பழகி காதலிப்பதாக கூறி ரூ.45 லட்சம் மோசடி….!!

கோவையில் முகநூல் மூலம் பழகி காதலிப்பதாக கூறி ரூ.45 லட்சம் மோசடியில் ஈடுப்பட்ட இளம்பெண் உட்பட 3 பேர் கைது. சென்னையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் அளித்த புகாரின் பேரில் சுருதி, அவரது தாயார் சித்ரா, பிரசன்னா ஆகியோரை காவல்துறை கைது செய்தது.