அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கைது!

RB Udayakumar

RB Udhayakumar: மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் கைது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உரம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அப்பகுதியில் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுபடுவதாக அப்பகுதி கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கழிவு நீரால் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர். இதனால் நடந்து முடிந்த மக்களவை தேர்தலை புறக்கணிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக … Read more

அதிமுகவின் தேர்தல் அறிக்கை காப்பி பிரிண்ட் இல்லை… ஆர்பி உதயகுமார்!

RB Udhayakumar

RB Udhayakumar : திமுக தேர்தல் அறிக்கையை அதிமுக காப்பி அடித்ததாக முதலமைச்சர் முன்வைத்த விமர்சனத்துக்கு ஆர்பி உதயகுமார் மறுப்பு தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கைகளை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த சூழலில் திமுக தேர்தலை அறிக்கையை அதிமுக காப்பி பிரிண்ட் அடித்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்தை முன்வைத்திருந்தார். முதலமைச்சர் கூறியதாவது, மத்திய பாஜகவுடன் கூட்டணியாக இருந்து சேர்ந்துகொண்டு தமிழ்நாட்டுக்கு எதையும் செய்யாமல் துரோகங்களை … Read more

அண்ணாமலை மட்டுமல்ல, அவரது தந்தை வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது – ஆர்.பி உதயகுமார்

RB Udhayakumar

அதிமுக தேர்தல் தயாரிப்பு குழு நாளை மக்களிடம் கருத்துக்களை கேட்க உள்ளது என்று அதிமுக அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பிரதான கட்சிகள் அனைத்தும் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை உள்ளிட்ட பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், அதிமுகவில் ஒருபக்கம் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் தேர்தல் தயாரிப்பு குழு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், … Read more

காலாவதியான கருணாநிதியின் கட்சி…ஆர்.பி உதயகுமார் சாடல்..!!

கருணாநிதியின் கட்சி காலாவதியான கட்சி என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.  மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார்,   ‘இந்த இயக்கத்தை எத்தனையோ பேர் வீர வசனம் பேசி அழிப்போம் என்று கூறினார்கள் ஆனால் அவர்கள்தான் காணாமல் போய் உள்ளனர். மதுரையில் அமைச்சராகவும், முன்னாள்  முதலமைச்சரின்  மகனான அழகிரியும் இதே மதுரையில் அதிமுகவை அழிப்போம் என்று கூறினார். ஆனால் தற்போது அவரைத் தேடும் நிலை தான் உள்ளது’ என்று கூறியுள்ளார். ‘நீதிமன்ற உத்தரவின் … Read more

ரெட் அலர்ட் அச்சபட வேண்டாம்…அரசாங்கம் அலட்.. மழை வெள்ளத்தில் அரசியல் வேண்டாம்…அமைச்சர்…!!

ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை ,மழை, வெள்ளத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று அமைச்சர் ஆர்.பிஉதயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்த அவர் மழைக்கால கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது அனைத்து துறைகளையும் தொடர்பு கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளோம். ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை.வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே முதலமைச்சர் 4 ஆய்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளார்.இந்நிலையில் அரசு தூங்குவதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியதற்கு … Read more

ஒரே நாளில் ஆட்சியை கலைத்து விடுவோம்..!வீரவசனம் வீசப்பட்ட நிலையிலும்..! 18வது மாதத்தில் அதிமுக அரசு..!!அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்..!!

வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவேசமாக கூறியதாவது…! ஓரிரு நாட்களில் ஆட்சியை கலைத்து விடுவோம் என்று வீரவசனம் பேசியவர்களுக்கு நடுவே, 17 மாதங்கள் முடிந்து 18வது மாதத்தில் அடி எடுத்து வைத்திருக்கும் ஆட்சியை மன்னாதி மன்னனாலும் அசைக்க முடியாது  என வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவேசமாக தெரிவித்துள்ளார்.மேலும் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்று கூறினார். DINASUVADU