கருமுட்டை விற்பனை தொடர்பாக சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஈரோடு போலீஸ் சம்மன்.
ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில், சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஈரோடு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஆவணங்களுடன் நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க இரு தனியார் மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. கருமுட்டை விற்பனை தொடர்பாக சிறுமியின் தாய் உள்ளிட்ட பேர் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு, பெருந்துறை, சேலம், திருப்பதி, திருவனந்தபுரம் மற்றும் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சிறுமி அழைத்து செல்லப்பட்டது அம்பலமானது. எனவே, சிறுமியின் கருமுட்டை பெறப்பட்டது தொடர்பான மருத்துவமனை பதிவேடும் விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. சேலம், ஓசூர் மருத்துவமனைகளின் நிர்வாகிகள் அடுத்த ஓரிரு நாட்களில் ஈரோடு போலீசாரிடம் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளனர்.