கேரளாவில் உள்ள ஆதி சங்கரர் பிறந்த இடத்திற்கு வருகை புரிந்த பிரதமர் மோடி!! 

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள காலடி கிராமத்தில் உள்ள துறவி-தத்துவ ஞானி ஆதி சங்கராச்சாரியார் பிறந்த இடமான ஆதி சங்கரர் ஜென்ம பூமி க்ஷேத்திரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை புரிந்தார். “சிறந்த இந்திய துறவியின்” பாரம்பரியத்தை போற்றும் வகையில், பெரியாறு நதிக்கரையில் அமைந்துள்ள ஆதி சங்கரரின் பிறந்த ஸ்தலத்திற்கு பிரதமர் வருகை புரிந்தார். அதன்பின், 4500 கோடி ரூபாய் மதிப்பிலான கொச்சி மெட்ரோ மற்றும் இந்திய ரயில்வேயின் பல்வேறு திட்டங்களை பிரதமர் அடிக்கல் நாட்டி … Read more

“கொச்சி அருகே நடுக்கடலில் விபத்து;மத்திய,மாநில அரசுகள் அக்கறை காட்டாதது ஏமாற்றமளிக்கிறது” – சீமான்…!

கொச்சியில் கடலில் மூழ்கியுள்ள நாகை மீனவர்களது விசைப்படகை மீட்டெடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். கொச்சி அருகே நடுக்கடலில் நாகை மீனவர்களது விசைப்படகு விபத்துக்குள்ளாகி மூழ்கித் தத்தளித்த 11 மீனவர்களும் மீட்கப்பட்டது பெரும் ஆறுதலைத் தருகிறது. எனினும்,மூழ்கிய விசைப்படகினையும் மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் … Read more

கொச்சியில் ரூ.1.35 கோடி மதிப்பில் விற்பனைக்கு வந்த விராட் கோலியின் லம்போர்கினி…!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முன்னதாக பயன்படுத்திய லம்போர்கினி 1.35 கோடிக்கு கொச்சியில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் கார் சேகரிப்பின் ஒரு பகுதியாக இருந்த விலையுயர்ந்த ஆடம்பர காரான ஆரஞ்சு லம்போர்கினி கல்லார்டோ ஸ்பைடர்,தற்போது கொச்சியில் உள்ள பழைய ஆடம்பர கார் வாங்கி விற்பனை செய்யும் ஷோரூம் ஒன்றில் விற்பனைக்கு வந்துள்ளது. முன்னதாக,ஒரு ஆட்டோமொபைல் வலைத்தளத்தில் இதனைக் கண்ட,கோலி இந்த லம்போர்கினியை 2015 இல் வாங்கினார்.ஆனால்,சிறிது நாட்களுக்குப் பின்னர் … Read more

கொச்சியில் கிளைடர் விபத்து..இரண்டு கடற்படை அதிகாரிகள் உயிரிழப்பு.!

கொச்சியில் உள்ள தொப்பும்படி பாலம் அருகே கிளைடர் மோதியதில் இரண்டு கடற்படை அதிகாரிகள் இன்று காலை சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். அவர்கள் ஐ.என்.எஸ் கருடாவிலிருந்து ஒரு வழக்கமான பயிற்சிப் பயணத்திற்கு புறப்பட்டபோது காலை 7 மணியளவில் இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்த இரண்டு அதிகாரிகள் உத்தரகண்ட் பகுதியைச் சேர்ந்த லெப்டினென்ட் ராஜீவ் ஜா மற்றும் பீகாரைச் சேர்ந்த சுனில் குமார் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு தெற்கு கடற்படை உத்தரவிட்டது. … Read more

5 குழந்தைகள் உட்பட 182 இந்தியர்கள் பஹ்ரைனில் இருந்து கொச்சிக்கு வந்திறங்கினர்.!

பஹ்ரைன் தலைநகர் மனாமாவிலிருந்து ஊர்திரும்ப முடியாமல் தவித்து வந்த 182 இந்தியர்கள் (5 குழந்தைகள் உட்பட) கேரளா மாநிலம் கொச்சி விமான நிலையம் வந்திறங்கினர். உலகம் முழுக்க கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருப்பதால் பெரும்பாலான நாடுகளில் பொது போக்குவரத்துகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் வெளிநாடுகளில் சிக்கி தவித்து வரும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.  இதற்காக 64 ஏர் இந்தியா விமானங்களை மற்ற நாடுகளுக்கு அனுப்பி வெளிநாடுகளில் இருக்கும் … Read more

இந்த ஊரை மறக்க முடியாது.! திரும்பவும் இந்தியா வருவேன்.! – நெகிழும் அமெரிக்காவாசி.!

கொச்சியில், 14 நாட்கள் தனிமைபடுத்துதல் முடிந்து சிறப்பு விமானம் மூலம் அமெரிக்கா திரும்பிய ஏஞ்சலா சான்செஸ் கூறுகையில், ‘ கொச்சியை என்னால் மறக்க முடியாது. அந்த ஊரை விட்டு போக மனமில்லை. மீண்டும் அடுத்த வருடம் கொச்சி வருவேன் ‘ என தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், நாடெங்கிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும், வெளியூர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி இருக்கவும் அரசு அறிவுறுத்தியிருந்தது. இதனால், கேரளா … Read more

சாகர் பூஷன் கப்பலில் வெடிவிபத்து ஏற்பட்டு தீ! 5 பேர் பலி….

ஓஎன்ஜிசி கப்பல்  கொச்சி கப்பல்கட்டும் துறையில், பழுதுபார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல்கட்டும் துறையில், ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு சொந்தமான சாகர் பூஷன் (Sagar Bhushan) என்ற கப்பல் பழுதுபார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்தது. இன்று காலை கப்பலில் வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பற்றியது. இதில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் 11 பேரை காயங்களுடன் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்ததனர். விபத்து ஏற்பட்ட … Read more

கல்லூரி மாணவர்களுடன் நடிகர் சூர்யா நடனமாடியது தவறு…வழக்கு விசாரணை…!!

  ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ப்ரோமோஷனிருக்காக கொச்சி சென்ற சூர்யா அங்கு கல்லூரி மாணவர்களோடு நடனமாடியுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தினை ‘கிறீன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசைமையமைத்துள்ளார். இப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில் நடிகர் சூர்யா கொச்சியிலுள்ள கல்லூரியின் மாணவர்களோடு நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ பதிவு https://youtu.be/_rdB5RM4vnM  

நடிகை பாவனாவிற்கு டிச 22ஆம் தேதி டும் டும்…!

இந்த வருடத்தில் மக்களை அதிர்ச்சியாக்கிய நிகழ்வில் ஒன்று நடிகை பாவனாவிற்கு நடந்த அநியாயம். அதற்கு காரணமான நடிகரும் தற்போது சிறையில் உள்ளார். பாவனாவிற்கும் அவரது நீண்ட நாள் காதலரும்,கன்னட திரைப்பட தயாரிப்பாளருமான நவீன் என்பவருக்கும் கடந்த மார்ச் 9ம் தேதி மிகவும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்தது. அதனை தொடர்ந்து தற்போது, இவர்களுக்கு வரும் டிசம்பர் 22ம் தேதி உறவினர்கள் மத்தியில் திருசூரில் திருமணம் நடக்க இருக்கிறதாம். திருமண விழாவும் நிச்சயதார்த்தம் நடந்தது போல் மிகவும் எளிமையான … Read more