இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 10 நாகை மீனவர்கள் விடுதலை…!

இலங்கை கடற்படையால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி கைது செய்யப்பட்ட மீனவர்கள் பத்து பேரையும் இலங்கை  திருகோணமலை  நீதிமன்றம் விடுதலை செய்து … Read more

தமிழக மீனவர்கள் கைது.!  மத்திய வெளியுறவு துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்.!

இலங்கையில் கைது செய்யப்பட்ட 9 நாகை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.  தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போதெல்லாம் ,  குறிப்பாக, நாகை, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போதெல்லாம், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்கதையாகி வருகிறது. அதே போல, கடந்த 10ஆம் தேதி நாகபட்டினம் பகுதி மீனவர்கள்,   இலங்கை எல்லையில் உள்ள முல்லை தீவு அருகே … Read more

#Breaking:தமிழக மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்;தொடரும் இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியம்!

நாகை:ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி,ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை எடுத்து விட்டு,மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். நாகையில் இருந்து நான்கு மீனவர்கள் மீன்பிடிக்க நேற்று கடலுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில்,மீனவர்கள்,ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது,அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்ட இரண்டு படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர்,அரிவாள்,ரப்பர் பைப்,கட்டை உள்ளிட்ட பொருட்களால் மீனவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். அதன்பின்னர்,படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி,செல்போன்,மீன்கள் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை எடுத்து விட்டு,மீனவர்களை … Read more

“கொச்சி அருகே நடுக்கடலில் விபத்து;மத்திய,மாநில அரசுகள் அக்கறை காட்டாதது ஏமாற்றமளிக்கிறது” – சீமான்…!

கொச்சியில் கடலில் மூழ்கியுள்ள நாகை மீனவர்களது விசைப்படகை மீட்டெடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். கொச்சி அருகே நடுக்கடலில் நாகை மீனவர்களது விசைப்படகு விபத்துக்குள்ளாகி மூழ்கித் தத்தளித்த 11 மீனவர்களும் மீட்கப்பட்டது பெரும் ஆறுதலைத் தருகிறது. எனினும்,மூழ்கிய விசைப்படகினையும் மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் … Read more