சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' திரை விமர்சனம்…!!

பாலிவுட்டில் அக்‌ஷய் குமார் நடிப்பில் செம்ம ஹிட் அடித்த படம் ‘ஸ்பெஷல் 26’. இதன் ரீமேக்கில் தான் சூர்யா இப்படத்தில் நடித்துள்ளார். சூர்யா அவருடைய நண்பர் கலையரசன் அரசாங்க வேலைக்காக போராடி வருகின்றனர். இதில் சூர்யா சிபிஐ.க்கும் போலிஸ் வேலைக்கு கலையரசனும் முயற்சி செய்து வர, ஒரு சில ஊழல், மேலதிகாரிகள் சதியால் இருவருக்குமே வேலை கிடைக்காமல் போகின்றது. அந்த விரக்தியில் கலையரசன் தற்கொலை செய்து கொள்ள அதன்பின், சூர்யா தனக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கி கொண்டு, போலி சி.பி.ஐ.களாக செயல்பட்டு … Read more

கல்லூரி மாணவர்களுடன் நடிகர் சூர்யா நடனமாடியது தவறு…வழக்கு விசாரணை…!!

  ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ப்ரோமோஷனிருக்காக கொச்சி சென்ற சூர்யா அங்கு கல்லூரி மாணவர்களோடு நடனமாடியுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தினை ‘கிறீன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசைமையமைத்துள்ளார். இப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில் நடிகர் சூர்யா கொச்சியிலுள்ள கல்லூரியின் மாணவர்களோடு நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ பதிவு https://youtu.be/_rdB5RM4vnM  

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படம்- விலை கோடியில் 

  சூர்யா ரசிகர்கள் சிங்கம் படத்திற்கு பிறகு நீண்ட நாள் காத்துக் கொண்டிருந்தனர். ஏனெனில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படம் பல பிரச்சனைகளுக்கு இடையே தயாராகி வந்தது.தற்போது படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து இவ்வருட பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படம் இதுவரை ரூ. 85 கோடிக்கு விலைபோயுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகமா இருக்கும் நிலையில் படமும் பிரம்மாண்ட தொகைக்கு விலைபோகியிருப்பது படக்குழுவை மிகவும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

சூர்யா படத்தின் மீது புகார்-பதிலடி கொடுத்த ஆர்.ஜெ.பாலாஜி

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம்பெறும் சொடக்கு பாடலில் வரும் “அதிகார திமிர, பணக்கார பவர வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது” என்ற வரி குறிப்பிட்ட கட்சியை கிண்டல் செய்வது போல் உள்ளது என்று அதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி சதீஷ்குமார் நேற்று புகார் அளித்திருந்தார். இதனை பார்த்த நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, “படத்தை தாண்டி நாட்டில் நிறைய பிரச்சனை இருக்கிறது. தற்போது பஸ் இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர், அவர்களுக்கு … Read more