7 நாள்ல எல்லா சிசிடிவி காட்சியும் வேணும்..!சிசிடிவி கேமராவை நிறுத்த சொன்னது யாரு..?போட்டு தாக்கிய ஆணையம்..!

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்  7 நாட்களில் சிசிடிவி காட்சி பதிவுகளை அப்போலோ மருத்துவமனை வழங்க வேண்டும் என்று உத்தரவு விட்டுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இறந்தது வரையிலான சிசிடிவி காட்சிகள் தேவை 7 நாட்களில் சிசிடிவி காட்சி பதிவுகளை அப்போலோ மருத்துவமனை வழங்க ஆறுமுகசாமிஆணையம் உத்தரவு விட்டுள்ளது. மேலும் சிசிடிவி காட்சி பதிவுகளை நிறுத்த சொன்னது யார் எனவும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டபோது நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிப்பு என அறிக்கை … Read more

பிறந்த நாள் கொண்டாடிய மறு நாளே மகளை கொன்ற கொடூர தந்தை ..!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பார்மஸி கல்வி பயின்று வந்த மாணவி சந்திரிகா. அவர் தனது 18 வது பிறந்தநாளை சிறப்புடன் கொண்டாடி உள்ளார் . அதன் பின்னர் அவர் தனது செல்போனில் ஒரு ஆணுடன் பேசுவதை அவரது தந்தை கோட்டையா பார்த்து விட்டார். இதனால் அதை ஏற்றுக்கொள்ள முடியாத அவர் கோடரியை கொண்டு சந்திரிகா வை தாக்கியுள்ளார் இதனால் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.அவருக்கு திருமணம் நிச்சயிக்க பட்டதால் கவுரவம் … Read more

முன்னணி இயக்குனர் ஆர்.தியாகராஜன் திடீர் மரணம்..!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தாய் மீது சத்தியம்,அன்புக்கு நான் அடிமை, ரங்கா,உள்ளிட்ட பல  ஹிட் படங்களை இயக்கியவர் ஆர்.தியாகராஜன் , 75 வயதை கடந்த இவர் சென்னை பேரூரில் வசித்து வந்தார். இன்று காலை நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடல் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.அவரது அடக்கம் நாளை நடைபெறவுள்ளது.இவர் பிரபல இயக்குனரும், பிரபல தயாரிப்பாளருமாகிய சாண்டோ சின்னப்பத் தேவரின் மருமகன்  என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிக வயதான பெண் தனது 117வது வயதில் மரணம் அடைந்தார்!!

ஜப்பான் நாட்டில் ககோஷிமா மாகாணத்திற்கு உட்பட்ட கிகாய் என்ற நகரில் வசித்து வந்தவர் நபி தஜிமா (வயது 117).  உலகின் மிக வயது முதிர்ந்த பெண்ணான இவருக்கு கடந்த ஜனவரியில் உடல் நல குறைவு ஏற்பட்டது.  இதனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கடந்த 1900ம் ஆண்டில் பிறந்த இவர் 19வது நூற்றாண்டை சேர்ந்த கடைசி நபர் என தெரிய வந்துள்ளது.  அவருக்கு பேர குழந்தைகள் என 160 பேர் உள்ளனர். ஜமைகா நாட்டை சேர்ந்த வயலட் … Read more

ஒக்கி புயலில் பலியான கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 2 பேரின் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டன.

கன்னியாகுமரி; ஒக்கி புயலால் காணமல் போன தமிழக  மீனவர்கள் கேரள கடல் பகுதிகளில் மீட்கப்பட்ட 70 உடல்கள் கொச்சி மற்றும் கொல்லம், திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டிருந்தன. திருவனந்தபுரத்தில் இருந்த உடல்கள் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், கன்னியாகுமரியை சேர்ந்த 5 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. இதையடுத்து, கிளிட்டசின் என்ற மீனவரின் உடல் சொந்த ஊரான சின்னத்துறைக்கு கொண்டு வரப்பட்டது. இதேபோல், மேலமணக்குடியை சேர்ந்த மைக்கேல் என்பவரின் உடலும் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் … Read more

இறந்தாக கூறப்பட்ட பெண் உயிரெழுந்து-மீண்டும் இறந்ததால் பரபரப்பு…!

கர்நாடக மாநிலம், தேவரகுட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் திருமணமான பெண் நாகவேணி கொடேரா.கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அந்த கிராமத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு குழந்தையைப் பெற்றெடுத்த அவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு, ரத்த அழுத்தம் குறைந்து இறந்துவிட்டதாக  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நாகவேணியின் உடல் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைப்பெற்று கொண்டிருந்தது. அப்போது   இறந்தாக கூறப்பட்ட அப்பெண் திறந்து பார்த்ததோடு கை, கால்களையும் அசைத்துள்ளார்.இதனைக் கண்ட உறவினர்கள், உடனடியாக அவரை … Read more

ஜெ. கைரேகை பொய்யானது!தி.மு.க. சார்பில் விசாரணை ஆணையத்தில் தகவல் ….

  தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்ட முன்னால் முதல்வர்  ஜெயலலிதா கையெழுத்து பொய்யானது , உயிரோடு எடுக்கப்படும் கைரேகையில் உள்ள ரிட்ஜட்ஸ் ஜெயலலிதா கைரேகை எனச் சொல்லப்படும் கைரேகையில் இல்லை – திமுக சார்பில் டாக்டர் சரவணன் ஜெயலலிதா  மரண விசாரனை ஆணையத்தில் தகவல். இடது புறம் உள்ளது ஜெயலலிதா  கைரேகை  வலது புறமுள்ளது உயிரோடு உள்ள சாதாரண மனிதனின் கைரேகை என்று அவர் புகார் அளித்தார்.அவர் அளித்த புகாரின் பேரில் நேற்று உத்தரவை நீதிபதி ஆறுமுகசாமி பிறபித்தார். … Read more