பைக்கின் பெட்ரோல் டேங்கில் காதலனுடன் கட்டிப்பிடித்தபடி அமர்ந்து சென்ற காதலி! கைது.!

ஆந்திராவில், பைக்கின் பெட்ரோல் டேங்கில் அமர்ந்து ரொமான்ஸ் செய்து கொண்டு சென்ற காதலர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.  ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் காதலர்கள் இருவர் ஓடும் பைக்கில் ரொமான்ஸ் செய்துகொண்டு சென்றுள்ளனர், 19 வயது சிறுமி, தன் 22 வயது காதலனுடன் பைக்கின் பெட்ரோல் டேங்கில் அமர்ந்து கட்டிப்பிடித்தபடி இருவரும் சென்றுள்ளனர். இதனால் இவர்கள் மீது கவனக்குறைவாக வாகனம் ஒட்டிய சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலிசார் இருவரையும் கைது செய்துள்ளனர். அவர்களது வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. … Read more

நடிகை ரோஜாவுக்கு திரையுலகம் சார்பில் பாராட்டு விழா ..!

தமிழ் திரை உலகில் செம்பருத்தி எனும் படத்தில் நடித்ததன் மூலமாக திரையுலகில் அறிமுகமாகிய நடிகை தான் ரோஜா. அதன் பின்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழிகளில் ரோஜா நடித்துள்ளார். மேலும் தற்போது இவர் ஆந்திர மாநிலத்தின் அரசியல்வாதியாகவும் உள்ளார். இந்நிலையில், நடிகை ரோஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநில சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக நடிகை ரோஜா பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் ரோஜாவுக்கு தென்னிந்திய திரையுலகம் சார்பில் வருகிற மே மாதம் ஏழாம் … Read more

ரயில் பாதையில் பையில் வைத்து வீசப்பட்ட ஆண் குழந்தை மீட்பு ..!

ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள விஜயநகர மாவட்ட ரயில்வே தண்டவாளத்தில் பையுடன் வீசப்பட்ட ஆண் குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொத்தவலசை இன்ஸ்பெக்டர் பி.எஸ்.ராவ் கூறுகையில், கொத்தவலசை ரயில் நிலையத்தில் திங்கள் கிழமை காலை 6 மணியளவில் கைவிடப்பட்ட ஒரு குழந்தை கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், குழந்தையை பார்த்த நபர் பையிலிருந்து எடுத்து பார்த்தபோது அது ஒரு ஆண் குழந்தை என தெரியவந்ததாகவும், இது தொடர்பாக ஒருவர் எங்களுக்கு அளித்த தகவலின் அடிப்படையில் அந்த இடத்துக்கு விரைந்து … Read more

எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து 40 வயது நபர் உயிரிழப்பு …!

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள விஜயவாடா நகரில் வசித்து வரும் ஒருவரது வீட்டில் நேற்று அதிகாலை எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்ததில் 40 வயது நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். எலக்ட்ரிக் பைக் பேட்டரி சார்ஜ் போட்டுவிட்டு அவர் தூங்கியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென அதிகாலை நேரத்தில் அந்த பேட்டரி வெடித்துள்ளது. இதனால் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது இரண்டு குழந்தைகளும் … Read more

திருடி விட்டு ஜன்னல் வழியே தப்பிக்க முயன்று சிக்கிக்கொண்ட திருடன் – வீடியோ உள்ளே..!

ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவிளுக்குள் இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் பணத்தை திருடுவதற்காக பாப்பராவ் எனும் 30 வையாது இளைஞன் ஒருவன் உள்ளே சென்றுள்ளான். திருடி விட்டு சுவரில் உள்ள சிறிய ஜன்னல் மூலமாக வெளியே வர முயற்சித்துள்ளார். ஆனால் வெளியே வரமுடியாமல் இவர் சிக்கிக் கொண்டுள்ளார். அருகிலிருந்து மக்கள் அவ்விடத்திற்கு வந்ததும் பாப்பாராவ் தன்னை காப்பாற்றுமாறு கதறியுள்ளான். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். போலீசார் பாப்பராவ் … Read more

ஆந்திர பிரதேசம் : பிளாஸ்டிக் பை தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து…!

ஆந்திர மாநிலத்தில் உள்ள பிளாஸ்டிக் பை தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள விஜயவாடா நகருக்கு அருகே உள்ள கிருஷ்ணா மாவட்டம், கன்னவரம் மண்டலத்தில் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள தகவலின்படி, கிருஷ்ணா மாவட்டம், தெம்பள்ளியில் உள்ள பிளாஸ்டிக் பை தயாரிக்க கூடிய நிறுவனமான விஜயா பரிசில் தீவிபத்து ஏற்பட்டு … Read more

செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 6 பேர் ஆந்திராவில் கைது…!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தை சேர்ந்த 6 பேரை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள பாக்கராபேட்டை வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்பு போலீஸார் சனிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர். அப்போது சிலர் செம்மரக்கட்டைகளை சுமந்து செல்வதை கண்ட போலீசார் அவர்களை சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றுள்ளனர். அப்பொழுது செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட பலர் தப்பி ஓடிய நிலையில், 6 பேரை மட்டும் போலீசார் … Read more

இன்று முதல் 50% வாடிக்கையாளர்களுடன் ஆந்திராவில் தியேட்டர்கள் திறப்பு…!

கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த ஆந்திர திரையரங்குகள் 3 மாதங்களுக்கு பின் இன்று 50% வாடிக்கையாளர்களுடன் திறக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தது. இந்நிலையில், ஆந்திராவில் கொரோனா பரவல் குறைந்ததால் கடந்த ஜூலை 8-ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்கலாம் என ஆந்திர அரசு அனுமதி வழங்கியது. ஆனால் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் திரையரங்குக்கு வந்தால் மிகுந்த … Read more

3 மாதங்களுக்கு பிறகு ஆந்திராவில் நாளை முதல் திரையரங்குகள் திறப்பு…!

கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த ஆந்திர திரையரங்குகள் 3 மாதங்களுக்கு பின் நாளை திறக்கப்படுகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடமையாக்கப்பட்டது. இந்நிலையில் பல மாநிலங்களில் வழிபட்டு தலங்கள், தியேட்டர்கள், மால்கள், கடைகள் அனைத்தும் இயங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேபோல ஆந்திர மாநிலத்திலும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையிலேயே … Read more

ஆந்திராவில் 260 கிலோ கஞ்சா பறிமுதல் ; 5 பேர் கைது!

ஆந்திர மாநிலத்திலுள்ள கடப்பா மாவட்டத்திற்குள் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட 260 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆந்திரா மாநிலத்தில் உள்ள கடப்பா எனும் மாவட்டத்தில் சட்ட விரோதமாக 260 கிலோ எடை கொண்ட கஞ்சா கடத்தி வரப்பட்டு உள்ளது. இந்த கஞ்சா மாவட்ட காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ராமு, தேஜா, ரங்காரெட்டி, நீல கந்தேஸ்வர் மற்றும் நாகேஸ்வர ராவ் ஆகியோர் என … Read more