அரசியலில் பெண்கள் இருப்பது மிகப்பெரிய சவால்…! அதற்கு உதாரணம் இவர்தான்..! – பிரேமலதா

premalatha

நேற்று முன்தினம் தேமுதிக கட்சியின் 18வது மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் விஜயாகநாத் அவர்கள் கலந்து கொண்டார். நீண்ட நாட்களுக்கு பின் விஜயகாந்தை நேரில் பார்த்ததால் தொண்டர்கள் மிகவும் உற்சாகமடைந்தனர். இந்த நிலையில், இந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானமாக தேமுதிக கட்சி பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து, தேமுதிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிரேமலதாவுக்கு  அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு … Read more

#Breaking:சசிகலா தான் ‘ஜெ.வை’ பார்த்துக் கொண்டார் – இளவரசி முக்கிய தகவல்!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில்,அவரது மரணம் தொடர்பாக விசாரிக்க கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி,ஜெயலலிதா அவர்கள் மரணம் தொடர்பாக இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இதனையடுத்து,3 ஆண்டுகளுக்கு பின் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளது. ஓபிஎஸ்-க்கு சம்மன்  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் … Read more

#Breaking:ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் தீபா,தீபக் சேர்ப்பு – உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கில் வழக்கில் ஜெ.தீபா.ஜெ.தீபக் ஆகியோரை சேர்த்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா அவர்கள்,கடந்த 2008,2009 ஆம் ஆண்டு செல்வ வரி கணக்கை செலுத்தவில்லை என்று வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.இதனை எதிர்த்து ஜெயலலிதா அவர்கள் வழக்கு தொடர்ந்த  நிலையில்,செல்வ வரி வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து,செல்வ வரி வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதவை விடுவித்ததை எதிர்த்து வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை … Read more

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து!

கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வேளச்சேரியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார்.அப்போது,ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த நிலையில், தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி,ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் … Read more

#Breaking:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டது மாரடைப்புதான் – அப்பல்லோ மருத்துவர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே தொடுக்கப்பட்ட வழக்கு காரணமாக 3 ஆண்டுகளாக ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடைபெறாமல் இருந்த நிலையில்,நேற்று முதல் ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது. இந்த விசாரணையின்போது மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுப்பு தெரிவித்ததாக ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் பாபு மனோகர் திடீர் தகவலை தெரிவித்தார். குறிப்பாக,தனக்கு தினமும் 16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறிய ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுப்பு தெரிவித்ததாகவும், … Read more

வேதா இல்லம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு..!

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மேல்முறையீடு செய்த வழக்கில் இன்று தீர்ப்பு.  மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் எனும் வீட்டில் வசித்து வந்தார். இந்த இல்லம்  அரசுடமையாக்கப்படும் என கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனை தொடர்ந்து, அந்த இடத்தை தமிழக அரசு கையகப்படுத்தி, அரசுடைமை … Read more

#BREAKING : ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை 3 மாதங்களில் ஏன் தாக்கல் செய்ய உத்தரவிட கூடாது…? – உயர்நீதிமன்றம்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை 3 மாதங்களில்  தாக்கல் செய்ய ஆணையத்திற்கு ஏன் உத்தரவிட கூடாது? முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் காலமானார். நீண்ட நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் மரணமடைந்தாலும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதிய தமிழக அரசு, அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய  ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், குழு அமைத்தது. இந்நிலையில், தொண்டன் சுப்பிரமணி … Read more

இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு ஜெயலலிதா நினைவிடம் திறப்பு…!

இன்று முதல் ஜெயலலிதாவின் நினைவிடம், மக்களின் பார்வைக்கு திறக்கப்படுகிறது.  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு, சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்டமான நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடம் கடந்த ஜனவரி 27-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததால், மக்களின் பார்வைக்கு திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து, இன்று முதல் ஜெயலலிதாவின் நினைவிடம், மக்களின் பார்வைக்கு திறக்கப்படுகிறது.

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவிற்கு பின் பெண்களுக்கு பாதுகாப்பில்லை – ராதிகா சரத்குமார்

ஜெயலலிதா மறைவிற்கு பின், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் நாளையுடன் தேர்தல் பரப்புரை நிறைவு பெறுகிறது. இதனால், அணைத்து கட்சியினரும், அனல் பராக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ராதிகா சரத்குமார் அவர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தங்களது கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருப்பதாகவும், தமிழகத்தில் பாஅஜாக் மீது பெரிய அளவில் பெறுதல் இல்லை என்றும் … Read more

கருணாநிதிக்கு ஒரு நியாயம், எனக்கொரு நியாயமா? கருணாநிதியை போன்று தான் நான் முதல்வரானேன் – முதல்வர் பழனிசாமி

அண்ணா இறந்த போது, எப்படி கருணாநிதி முதல்வரானாரோ, அதே போன்று, புரட்சி தலைவி ஜெயலலிதா மறைவிற்கு பின் நான் முதல்வரானேன். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தருமபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நான் எப்படி முதல்வரானேன் என்று எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான். அண்ணா இறந்த போது, எப்படி கருணாநிதி முதல்வரானாரோ, அதே போன்று, புரட்சி தலைவி ஜெயலலிதா மறைவிற்கு பின் நான் முதல்வரானேன். … Read more