நேபாளத்தில் கனமழை நிலச்சரிவால் 9 பேர் பலி – 22 பேர் மாயம்!

நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் பலியாகியுள்ளனர், 22 பேர் காணாமல் போயுள்ளனர். நேபாளத்தில் பருவமழை துவங்கியுள்ளதால் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து சாலை எங்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஒருபுறம் கொரோனா பாதிப்பால் மக்கள் வெளியில் வர முடியாமல் அவதிப்படும் சூழ்நிலையில் கன மழை வெள்ளத்தால் வீடுகளை சூழ்ந்து நீர் ஓடுகிறது. நேபாள மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் முடங்கியுள்ள நேபாளத்தில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் கனமழை பெய்து … Read more

தீவிரவாதி சுட்டுக்கொலை.!காஷ்மீரில் அத்துமீறும் பாக்.,

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்பு படையினரால் தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய -சீனா எல்லையில்  நிலவும் பதற்றம் ஒரு புறம் என்றால் மறுபுறமோ பாகிஸ்தான் தீவிரவாதிகளின் அட்டுழியம் கால்வான் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் போது என்ன தான் நடக்க போகிறது என்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த வேளையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதல் சற்று ஒய்ந்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்பு படையினரால் தீவிரவாதி சுட்டுக்கொலை  செய்யப்பட்டுள்ளான்.இந்த … Read more

ஜம்முவில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.!

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள  தின்சுகியா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக வந்த தகவல் கிடைத்ததை தொடர்ந்து காஷ்மீர் போலீசாரும், ராணுவத்தினரும் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது, பயங்கரவாதிகள் பதுங்கிய வீட்டைச் சுற்றி இன்று காலை அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த துபபாக்கிச் சண்டையில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து, அங்கு ஏராளமான படைவீரர்கள் குவிக்கப்பட்டு துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது. ஆபரேஷன் வைப் அவுட் என்ற பெயரில் கடந்த ஒருவாரத்தில் சுமார் 20 தீவிரவாதிகளை … Read more

மறைந்தார் பொதுச்செயலாளர் க அன்பழகன்…மு.க ஸ்டாலின்…தொண்டர்கள் அஞ்சலி

மறைந்த தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடலுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க அன்பழகன் வயது மூப்புக் காரணமாக கடந்த ஒரு வருடமாக வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென்று அவரது  உடல்நிலை மோசம் அடைந்தது இதனால் அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு   சிறப்பு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த போதும் அவரது உடல் … Read more

வளைகாப்பு நடந்த சில நாள்களில் தூக்கில் தொங்கிய 5 மாத கர்ப்பிணி .!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருண்ராஜ் , ஜெயஸ்ரீ திருமணம் செய்து கொண்டனர். வளைகாப்பு நிகழ்ச்சியில் ஜெயஸ்ரீக்கு தங்க விலையில் போட சொல்லி உள்ளனர். ஆனால் அந்த நிகழ்ச்சியில் ஜெயஸ்ரீ குடும்பத்தினர் தங்க வளையல் போடவில்லை. கடலூர் மாவட்டம் அக்ராமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. இவர் புதுச்சேரியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்ற போது அப்பகுதியில் உள்ள அருண்ராஜ் என்பவருடன்  பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் அருண்ராஜ் , ஜெயஸ்ரீ … Read more

கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த 14 வயது சிறுவன் .!

கடந்த ஆறாம் தேதி புருஷோத்தமனை காணவில்லை என கூறி நேற்று முன்தினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நேற்று புருஷோத்தமன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் சடலமாக கிடந்தார். செங்கல்பட்டு அடுத்து உள்ள வெண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி உஷா இவர்களுக்கு புருஷோத்தமன் என்ற 14 வயது மகன் உள்ளர்.இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி புருஷோத்தமனை காணவில்லை என அவரது … Read more

மருத்துவர்கள் அலட்சியம் தாய் – பிறந்த குழந்தை மரணம்.!

நாமநாதபுரத்தில் குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே தாயும்  ,அவரது குழந்தையும் உயிரிழந்தனர். பிரசவத்தில் மருத்துவர்கள் அலட்சியத்தால் தான் தாய் -குழந்தை இறந்ததாக உறவினர்கள் குற்றசாட்டு . நாமநாதபுரத்தில் உள்ள ராஜசூரியமடை சேர்ந்தவர் முருகேசன்.இவருக்கும் அரியக்குடியை சார்ந்த ராமசந்திரன் மகள் கீர்த்திகாகவும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.முருகேசன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் கர்ப்பிணியான கீர்த்திகாவுக்கு நேற்று திடீர்ரென பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. இதனால் கீர்த்திகா உறவினர்கள் அவரை நாமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.நேற்று … Read more

இறந்த பெண் காவலரை தோளில் சுமந்து சென்ற துணை காவல் ஆணையர்..!

சென்னை வேப்பேரியை சார்ந்தவர் ஸ்ரீதேவி (48) தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 11-ம்  உடல்நிலை குறைவால் இறந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாள்களாக வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவரை மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்த போது அவருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது என ஸ்ரீதேவி வளர்ப்பு மகன் முனுசாமி கூறினார். இதனால் இவரது இறுதி சடங்கு12-ம் தேதி நடைபெற்றது. இந்த இறுதி அஞ்சலி … Read more

எக்ஸ்ரே அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நோயாளி ..!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இறவாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு கீர்த்தனா என்ற மகளும் உள்ளார். மணிகண்டன் மோட்டார் பழுது பார்க்கும் தொழிலை செய்து வருகிறார்.இந்நிலையில் ஜெயங்கொண்டத்தில்  உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மணிகண்டன்  மனைவி கீதாவுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கீதா டீ வாங்க சென்றுள்ளார். அந்த நேரத்தில் திடீரென மணிகண்டன் மாயமானார். ரொம்ப நேரமாக கீதா தேடியும் அவரை காணவில்லை பின்னர் மருத்துவ மனையில் வேலை … Read more

சென்னை ஐஐடி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை……!!

சென்னை ஐஐடி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 மாதத்தில் இது 3-வது தற்கொலை என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்கண்டை சேர்ந்த ரஞ்சனா குமாரி என்னும் மாணவி சென்னை ஐஐடியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பெண்கள் விடுதியில் தங்கி படித்து வரும் ரஞ்சனாவின் விடுதி அறையின் கதவு பூட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்ற ஊழியர்கள், மாணவி தூக்கிட்டு தற்கொலை … Read more