தீவிரவாதி சுட்டுக்கொலை.!காஷ்மீரில் அத்துமீறும் பாக்.,

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்பு படையினரால் தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய -சீனா எல்லையில்  நிலவும் பதற்றம் ஒரு புறம் என்றால் மறுபுறமோ பாகிஸ்தான் தீவிரவாதிகளின் அட்டுழியம் கால்வான் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் போது என்ன தான் நடக்க போகிறது என்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த வேளையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதல் சற்று ஒய்ந்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்பு படையினரால் தீவிரவாதி சுட்டுக்கொலை  செய்யப்பட்டுள்ளான்.இந்த சம்பவம் ஆனது புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோராவில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பாக்., தீவிரவாதிகளுக்கு இடையே கடுமையான துப்பாக்கிச்  சண்டை  நடந்தது.இந்த சண்டையில் அடையாளம் தெரியாத தீவிராவதியை பாதுகாப்பு படையனர் சுட்டுக் கொன்றதாக ராணுவ வட்டாரத் தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
kavitha