ஜம்முவில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.!

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள  தின்சுகியா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக வந்த தகவல் கிடைத்ததை தொடர்ந்து காஷ்மீர் போலீசாரும், ராணுவத்தினரும் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.

அப்போது, பயங்கரவாதிகள் பதுங்கிய வீட்டைச் சுற்றி இன்று காலை அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த துபபாக்கிச் சண்டையில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து, அங்கு ஏராளமான படைவீரர்கள் குவிக்கப்பட்டு துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது.

ஆபரேஷன் வைப் அவுட் என்ற பெயரில் கடந்த ஒருவாரத்தில் சுமார் 20 தீவிரவாதிகளை ராணுவம் கொன்றது.

author avatar
murugan