வேனும், தண்ணீர் லாரியும் மோதி கோர விபத்து – 4 பெண்கள் உயிரிழப்பு..,15 பேர் படுகாயம்!

பெண்களை பணிக்கு அழைத்து சென்ற தனியார் வேன், தண்ணீர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழப்பு. தூத்துக்குடி மாவட்டத்தில் சில்லாநத்தம் பிரதான சாலையில் தனியார் நிறுவன வேனும், தண்ணீர் லாரியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்ததாகவும், 15 படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. புதியமுத்தூரில் இருந்து தனியார் நிறுவனத்துக்கு பெண் பணியாளர்களை ஏற்றி சென்ற வேன், எதிரே வந்த தண்ணீர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து … Read more

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி காலமானார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி இன்று உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.அவருக்கு வயது 87.இதனையடுத்து,அவரது உடல் சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இல்லத்தில் கட்சியினர், பொதுமக்கள் மரியாதை செலுத்திட வைக்கப்பட்டு உள்ளது. 1934 ஆம் ஆண்டில் பிறந்த திண்டிவனம் ராமமூர்த்தி அவர்கள்,1967 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரான இருந்தார்.1976 ஆம் ஆண்டு … Read more

அதிர்ச்சி..!மஞ்சள், கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை நோய் பாதிப்பு;59 வயதான கொரோனா நோயாளி பலி..!

உத்திரப்பிரதேச மாநிலத்தின்,காசியாபாத்தில்,மஞ்சள், கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை நோய் பாதித்த 59 வயதான கொரோனா நோயாளி உயிரிழந்தார். இந்தியா முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிகையும் அதிகரித்த நிலையில்,கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வருபவர்களுக்கு, கருப்பு பூஞ்சை பாதிப்பு பரவத் தொடங்கியது.இதனையடுத்து,கருப்பு பூஞ்சை பாதிப்பால் பலர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து,வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சையும் பரவத் தொடங்கியது. இந்நிலையில்,உத்திரப்பிரதேசத்தின்,காசியாபாத் … Read more

பழிக்குப் பழி;இரண்டு மர்ம நபர்களால் 5 முறை சுட்டுக்கொல்லப்பட்ட டாக்டர் தம்பதியினர்…!

ராஜஸ்தானின்,பரத்பூர் அருகே காரில் சென்ற டாக்டர் தம்பதியினர், இரண்டு மர்ம நபர்களால் 5 முறை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் வசிக்கும் டாக்டர் சுதீப் குப்தா மற்றும் அவரது மனைவி டாக்டர் சீமா குப்தா ஆகிய இருவரும் தீபா என்ற 25 வயது பெண் மற்றும் அவரது 6 வயது மகன் ஆகியோரைக் கொன்ற வழக்கில் 2019 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டனர்.அதன்பின்னர்,தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில்,டாக்டர் சுதீப் குப்தா மற்றும் … Read more

ஜெருசலேமின்,காசா பகுதியில் நடந்த தாக்குதலில் இந்திய பெண் பலி..!

ஜெருசலேமின் காசாவை இஸ்ரேல் தாக்கியதில் இந்திய பெண் உட்பட 33 பேர் உயிரிழந்துள்ளனர். புனித ரமலான் மாதம் ஆரம்பமானதிலிருந்து இஸ்ரேல் காவல்துறையினருக்கும்,பாலஸ்தீனர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில்,திங்கள்கிழமையன்று பாலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அப்போது,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இஸ்ரேல் காவல்துறையினரின் மீது கற்கள் உள்ளிட்ட சில பொருள்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து,பாலஸ்தீனர்களைக் கட்டுபடுத்த இஸ்ரேல் காவல்துறையினர் ரப்பர் தோட்டாக்கள், ஸ்டன் கையெறி குண்டுகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.இந்த கலவரத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இருப்பினும்,இந்த மோதலில் 21 … Read more

பனிச்சரிவில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழப்பு..!

இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் பனிச்சரிவில் சிக்கி  தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரகாஷ் என்பவர் உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் பிரகாஷ் என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவத்தில் சேர்ந்த ‘கோர் ஆப் சிக்னல்ஸ்’ என்ற தகவல் தொழில்நுட்ப பிரிவில்  ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ராணுவ வீரர் பிரகாஷ் இந்தியா- சீனா எல்லையின் ‘கேங்டாக் சிக்கிம்’ பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது,அங்கு ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி கடந்த 3 … Read more

மும்பை “அண்டர்வேல்ட் டான்” சோட்டா ராஜன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு..!

புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அண்டர்வேல்ட் டான் சோட்டா ராஜன் உயிரிழந்துள்ளார். ராஜேந்திர நிகால்ஜே அல்லது சோட்டா ராஜன் என்று அழைக்கப்படும் மும்பை அண்டர்வேல்ட் டான்,சமீபத்தில் இந்தோனேசியாவிலிருந்து கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து புது தில்லியில் உள்ள உயர் பாதுகாப்பு கொண்ட திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில்,மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் சோட்டா ராஜன் மீதான வழக்குகளை விசாரிக்க திங்களன்று வீடியோ கான்ஃப்ரன்ஸில் ராஜனை ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிக்கு உத்தரவிட்டது. ஆனால், கொரோனா … Read more

கொரோனா தொற்றால் காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் ஏட்டு ஆகியோர் பலி..

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் ஏட்டு ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை பாதுகாப்பு பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சின்னக்கண்ணு என்பவர் கொரோனா தொற்று காரணமாக கடந்த 28 ஆம் தேதி சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.இருப்பினும் சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் சின்னக்கண்ணு நேற்று அதிகாலை உயிரிழந்தார்.எஸ்.ஐ சின்னக்கண்ணுவின் சொந்த ஊரான வேலூர் மாவட்டத்தின் சேனூரில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதேப்போன்று,சென்னை ஆயுதப்படை தலைமை … Read more

தாயின் சடலத்துடன் ஒரு வாரமாக படுத்திருந்த 54 வயது மகன்!

உயிரிழந்த தனது தாயின் சடலத்துடன் மனநலம் பாதிக்கப்பட்ட 54 வயது மகன் ஒரு வாரமாக ஒரே வீட்டில் தங்கியிருந்துள்ளார். டெல்லியில் உள்ள உஸ்மான்பூர் எனும் பகுதியில் தனது 54 வயது மகனுடன் பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னொரு மகனும் மகளும் உள்ளனர் ஆனால் அவர்கள் வெளிநாட்டில் உள்ளனராம். அவருடன் வசிக்கும் 54 வயது மகனுக்கு மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் தனது 54 வயது மகனுடன் வசித்து வந்த இந்தப் பெண்மணி … Read more

ஒடிசாவில் அதிர்ச்சி.. ஒரே வீட்டில் 6 உயிரிழப்பு.!

ஒடிசாவின் பலங்கீர் மாவட்டத்தில் உள்ள பட்நகர் காவல் நிலையப்பகுதியில் உள்ள சன்ரபாடா கிராமத்தில் உள்ள புலு ஜானி (50), அவரது மனைவி ஜோதி (48) மற்றும் 12 முதல் இரண்டு வயது வரையிலான இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் ஆகிய 6 பேர் இறந்த நிலையில் சடலங்களை போலீசார் அவர்களது வீட்டில் இருந்து மீட்டனர். கைப்பற்றிய சடலங்களை மருத்துவ பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார். இவர்களின் வீட்டு கதவு  நீண்ட நேரம் பூட்டப்பட்டிருப்பதை உள்ளூர்வாசிகள் … Read more