ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு இபிஎஸ், ஓபிஎஸ் மலர் தூவி மரியாதை..!

EPS, OPS

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  6 முறை பதவி வகித்தவர். கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த அவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின்  76 வது பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் கொண்டாடுகின்றனர். இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான … Read more

இத்தனை ஆண்டுகளாக கொடநாடு வராதது ஏன்? – மனம் திறந்த சசிகலா

vk sasikala

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக சசிகலா, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள கொடநாடு எஸ்டேட்டுக்கு நேற்று மாலை வந்தடைந்தார். கொடநாடு பங்களாவில் ஜெயலலிதா பெயரில் தியான மடம் மற்றும் சிலை அமைக்கப்பட உள்ள நிலையில், அதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்வதற்காக, சசிகலா அங்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது. அதன்படி, கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவச்சிலை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் சசிகலா, எஸ்டேட் … Read more

7 ஆண்டுகளுக்கு பிறகு கொடநாட்டில் காலடி வைக்கும் சசிகலா… காரணம் இதுதான்!

vk sasikala

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து பல்வேறு கோணங்களில் நடைபெற்று வரும் நிலையில்,  7 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகலா, நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டுக்கு இன்று புறப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், அடுத்த சில நாட்களிலேயே அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர், சொத்துக்குவிப்பு … Read more

இபிஎஸ் , ஓபிஎஸ்-ஐ தொடர்ந்து ஜெ.நினைவிடத்தில் சசிகலா.! ஆதரவாளர்களுடன் பேரணியாக வந்துள்ளர்.!

சசிகலா தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அஞ்சலி செலுத்துவதற்கு வந்துள்ளார்.  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்று காலை முதலே சென்னை, மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் பலர் வந்து தங்கள் அஞ்சலியை செலுத்திவிட்டு செல்கின்றனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி … Read more

இபிஎஸ் உறுதிமொழியை தொடர்ந்து ஜெ. நினைவிடத்தில் ஓபிஎஸ் உறுதிமொழி.! தொண்டர்களை ஒருங்கிணைப்போம்…

ஜெயலலிதா நினைவிடத்தில் ‘தொண்டர்களை ஒன்றிணைப்போம். அதிமுகவை வெற்றியடைய செய்வோம். ‘ என ஓபிஎஸ் தரப்பினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்று காலை முதலே சென்னை, மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் பலர் வந்து தங்கள் அஞ்சலியை செலுத்திவிட்டு செல்கின்றனர். காலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அடுத்ததாக தொண்டர்களுடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். எதிரிகள் … Read more

அதிமுக என்ற கட்சியே இனி இருக்காது – ஜெ.தீபா பரபரப்பு பேட்டி!

போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பிறகு ஜெ.தீபா பரபரப்பு பேட்டி. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் இபிஎஸ் தரப்பு, ஓபிஎஸ் தரப்பு உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அந்தவகையில், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.தீபா, ஜெயலலிதாவின் 6-ஆம் … Read more

ஜெயலலிதா மரணம் – சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அடிப்படையில் சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆர்.ஆர்.கோபால்ஜி என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். தமிழக அரசு மற்றும் சிபிஐயிடம் மனு அளிக்காமல் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் ரகசியமும், வெளிப்படை தன்மையும் பின்பற்றவில்லை … Read more

ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விட கோரி வழக்கு!

ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விட கோரி வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.  கர்நாடக கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விட கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டதை அடுத்து 1996-ல் அவர் உடமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பெங்களுருவில் சட்டமன்ற வளாகத்தில் உள்ள அரசு கருவூலத்தில் ஜெயலலிதாவின் பறிமுதல் செய்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் தங்க, வைர ஆபரணங்கள், 11,244 பட்டு சேலைகள், 750 ஜோடி காலணிகள், … Read more

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அறிக்கையை தாக்கல் செய்தது தனிப்படை!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரிக்கப்பட்ட சாட்சியங்களின் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது காவல்துறை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை தனிப்படை போலீசார் நீதிமன்றத்தின் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மறுப்புலன் விசாரணையில் சசிகலா உள்ளிட்ட 326 சாட்சியங்களின் வாக்குமூலங்கள் அடங்கிய அறிக்கையை உதகை நீதிமன்றத்தில் தனிப்படை போலீசார் தாக்கல் செய்தனர். சிறப்பு காவல் டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி 1,500 பக்கங்கள் கொண்ட சாட்சியங்களின் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

கோடநாடு வழக்கு – மருது அழகுராஜ் ஆஜரானார்!

கோடநாடு கொலை, கொள்ளை  தொடர்பான  விசாரணையில் மருது அழகுராஜ் ஆஜரானார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்கும் தனிப்படையின் அழைப்பாணையை ஏற்று, இன்று காலை கோவையில் விசாரணைக்கு ஆஜராகிறேன் என்று நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கின் விசாரணையில் நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் ஆஜரானார். கோடநாடு வழக்கு தொடர்பாக கோவை மேற்கு மண்டல … Read more