சென்னை : இளம்பெண்ணை எரித்து கொன்ற முன்னாள் காதலன்.! விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்…

Chennai IT Employee Died

சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் கேளம்பாக்கம், நாவலூர் பகுதியில் பொன்மார் வேதகிரி நகரில் ஒரு இடத்தில் ஒரு இளம்பெண் உடலில் தீயிட்டு எரிந்த நிலையில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தாழம்பூர் காவல்துறையினர் எரிந்த நிலையில் இருந்த பெண்ணை மீட்டனர். இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 76 பேர் பலி.! அந்த இளம்பெண்ணை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இளம்பெண் … Read more

செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே 10 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன..!

செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் பத்துக்கு மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டன. தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில் செங்கல்பட்டு காவல் நிலைய ரயில்வே கேட் பகுதியில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. ரயில் பெட்டிகளின் பாரம் தாங்காமல் தண்டவாளம் உடைந்து பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. தடம் புரண்ட சரக்கு ரயிலின் பெட்டியை அப்புறப்படுத்தி தண்டவாளத்தை சீர் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 50-க்கும் … Read more

Today Live : புயல் பாதிப்பு.! திமுக மாநாடு, கலைஞர் 100 நிகழ்ச்சி தேதிகள் ஒத்திவைப்பு.!

இன்று தமிழகம் மற்றும் கர்நாடகாவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. சென்னை அருகே செங்கல்பட்டை மையமாக கொண்டு லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இன்று காலை சரியாக 7.39 மணி அளவில் பூமிக்கடியில் 10கிமீ தொலைவில் இந்த நில அதிர்வு உருவாகியுள்ளது.  ரிக்டர் அளவுகோலில் 3.2 என்ற அளவில் பதிவானது. அதே போல, கர்நாடக மாநிலம் விஜயபுரத்திலும் இதே போல நில அதிர்வு உணரப்பட்டது. அங்கு நில அதிர்வானது 3.1 என பதிவாகியுள்ளது. காலை 6.52 மணிக்கு … Read more

தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

Exam postponement

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 4ம் தேதி முதல் இன்று வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த சூழலில். புயல், வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரண பணிகள் தற்போது வரை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நாளையும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர், ஸ்ரீபெரம்பத்தூர் … Read more

டிச.4ம் தேதி திருவள்ளூர், செங்கல்பட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

school leave

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில், சமீபத்தில் வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், ஒருசில நாட்களில் புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் (Michaung) எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை … Read more

#BREAKING: செங்கல்பட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை!

தொடர்மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிப்பு.  கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மதியத்திற்கு பின் அரைநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் காலை முதல் மழை பெய்து வரும் நிலையில், தற்போது அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்குள் நீர் தேங்கியிருந்ததால் விடுமுறை விட அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்தார். எனவே, நீர் தேங்கியிருந்ததால் … Read more

#Breaking : இந்த மாவட்டங்களில் இன்று இரவு பேருந்து சேவை கிடையாது.! பறக்கும் புதிய உத்தரவுகள்….

புயல் எச்சரிக்கை தொடர்பாக 6 மாவட்டங்களில் இன்று இரவு நேர பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டதாகவும், மாவட்ட தலைமை அலுவகங்கள் 24 மணிநேரமும் செயல்படவும் உத்தரவிடப்பட்டுள்ளது.   மாண்டஸ் புயல் வங்கக்கடலில் உருவாகி தமிழகத்தை நெருங்கி கொண்டிருப்பதால், வடதமிழகம் மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை, அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள இன்று தலைமை செயலர் இறையன்பு தலைமையில் அனைத்து துறை செயலர்களும் ஆலோசனையில் ஈடுப்பட்டனர். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் வருவாய் நிர்வாக … Read more

ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை எல்லாம் கிடையாது.! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு.!

ஓணம் பண்டிகை உள்ளூர் விடுமுறை நாளை செங்கல் பட்டு மாவட்டத்திற்கு கிடையாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  நாளை கேரளா முழுவதும் ஓணம் பண்டிகை கோலாகமலாக கொண்டாடப்பட உள்ளது. நாளை கேரளா முழுவதும் பொது விடுமுறை. அது போல, கேரளா எல்லையில் உள்ள தமிழக ஊர்களிலும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இது குறித்து, இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாளை ஓணம் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு … Read more

அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் SMS மற்றும் Websites-களில் வரும் Link – செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை

அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் SMS மற்றும் Websites-களில் வரும் Link-களில் சென்று எந்த தகவல்களையும் தெரிவிக்க வேண்டாம் என்று செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் SMS மற்றும் Websites-களில் வரும் Link-களில் சென்று Mobile No, Account No, OTP, Debit Card, Cvv போன்ற எந்த தகவல்களையும் தெரிவிக்க வேண்டாம் என்று செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘ஊரப்பாக்கத்தை சேர்ந்த திரு.சுதாகர் என்பவர் … Read more

இன்று முதல் ஜன.31 ஆம் தேதி வரை தடை – அதிரடி உத்தரவு!

செங்கல்பட்டு:வண்டலூர் பூங்கா ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று முதல் 31 ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதனால்,தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,வண்டலூர் உயிரியல் பூங்காவில், பூங்கா ஊழியர்கள் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை … Read more