செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே 10 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன..!

செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் பத்துக்கு மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டன. தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில் செங்கல்பட்டு காவல் நிலைய ரயில்வே கேட் பகுதியில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. ரயில் பெட்டிகளின் பாரம் தாங்காமல் தண்டவாளம் உடைந்து பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. தடம் புரண்ட சரக்கு ரயிலின் பெட்டியை அப்புறப்படுத்தி தண்டவாளத்தை சீர் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 50-க்கும் … Read more

தொடர் ரயில் விபத்துக்கள்.. சபாநாயகருக்கு கடிதம் எழுதிய திமுக எம்.பி டி.ஆர்.பாலு.!

DMK MP TR Balu

கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டு சுமார் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1200 பேர் படுகாயம் அடைந்தனர். இதுக்கு அடுத்து கடந்த மாதம் ஆந்திர மாநிலம் விஜயநகரம் அருகே இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த ரயில் விபத்துகள் தொடர்பாக திமுக எம்.பி டி.ஆர்.பாலு மத்திய நாடாளுமன்ற குழு தலைவர் ஓம் பிர்ல்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். டி.ஆர்.பாலு … Read more

ஆந்திராவில் ரயில் விபத்தால் இதுவரை 18 ரயில்கள் ரத்து!

Andhra Train Accident

ஆந்திராவில் ரயில் விபத்தால் இதுவரை 18 ரயில்கள் முழுமையான ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் ஹவுரா-சென்னை வழித்தடத்தில் விசாகப்பட்டினம் மற்றும் பலாசா இடையே இரண்டு பயணிகள் ரயில்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் நேற்றுவரை 9 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டு இருந்த நிலையில், தற்போது  பலி எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது என விஜயநகர மாவட்ட ஆட்சியர் நாகலட்சுமி தெரிவித்துள்ளர். மேலும் … Read more

ஆந்திரா ரயில் விபத்து.! பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு.!

Andhra Train Accident

நேற்று மாலை ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் ஹவுரா-சென்னை வழித்தடத்தில் விசாகப்பட்டினம் மற்றும் பலாசா இடையே இரண்டு பயணிகள் ரயில்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை அடுத்து 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 22 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. ரயில் சிக்னல் இல்லாததன் காரணமாக அலமண்டா மற்றும் கண்டகப்பள்ளி ரயிலானது தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது விசாகப்பட்டினம் – ராய்காட் பயணிகள் ரயில் பின்னால் இருந்து மோதியது. இந்த விபத்தில் 3 … Read more

ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் – முதல்வர் ஸ்டாலின்!

mkstalin -train

ஆந்திரா ரயில் விபத்தில் உயிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, ரயில் பயணிகளின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் நேற்று இரவு 2 ரயில்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.  படுகாயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை … Read more

ஆந்திரா ரயில் விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்!

Train Accident

ஆந்திரா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் பலாசா பயணிகள் ரயில் மீது விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மோதியது.  இந்த விபத்தில் விசாகப்பட்டினம் விரைவு ரயில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் மோதிக்கொண்ட விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ரயில் … Read more

#BREAKING: ஆந்திரா ரயில் விபத்து.. பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு..!

கண்டகப்பள்ளி  ரயில் விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக விஜயநகர மாவட்ட ஆட்சியர் நாகலட்சுமி தகவல் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் பலாசா பயணிகள் ரயில் மீது விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மோதியது.  இந்த விபத்தில் விசாகப்பட்டினம் விரைவு ரயில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் மோதிக்கொண்ட விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. ரயில் விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக … Read more

#BREAKING : ரயில் விபத்து – அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!

சென்னை, கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியானது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. வேகமாக சென்ற ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி நின்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிரேக் சரியாக இயங்காததால், கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி ரயில் விபத்துக்குள்ளானதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ரயிலில் யாரும் இல்லை எனவும், விபத்தில் ரயில் ஓட்டுநர் மட்டும் … Read more

ரயிலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்- மத்திய பிரதேச முதலமைச்சர்

ரயில் மோதி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வந்த  பகுதியில் இருந்து  தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து சென்று வருகின்றனர். இதனிடையே தான்  மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் மாவட்டத்தில் இருந்து மத்திய பிரதேசத்தை நோக்கி … Read more