ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை எல்லாம் கிடையாது.! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு.!

ஓணம் பண்டிகை உள்ளூர் விடுமுறை நாளை செங்கல் பட்டு மாவட்டத்திற்கு கிடையாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

நாளை கேரளா முழுவதும் ஓணம் பண்டிகை கோலாகமலாக கொண்டாடப்பட உள்ளது. நாளை கேரளா முழுவதும் பொது விடுமுறை. அது போல, கேரளா எல்லையில் உள்ள தமிழக ஊர்களிலும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இது குறித்து, இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாளை ஓணம் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ள்ளது.

அந்த உள்ளூர் விடுமுறை செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பொருந்தாது. நாளை, வழக்கம் போல அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல இயங்கும் என அறிவித்துள்ளார்.

Leave a Comment